பட்டாசு விபத்து 5 வயது குழந்தை உட்பட 3 பேர் மரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

பட்டாசு விபத்து 5 வயது குழந்தை உட்பட 3 பேர் மரணம்

ராஞ்சி, நவ.15 ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் சந்தையில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 வயது குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 ராஞ்சியில் உள்ள சந்தை ஒன்றில் சுபாஷ் குப்தா என்பவரின் கடையின் முன்பு பட் டாசுகளை வெடித்துக்கொண்டு இருந்தனர். அதில் பட்டாசு ஒன்று கடையில் விழுந்து தீப்பற்றியது தீ, கடையின் மேல் தளத்திலுள்ள வீட்டிற்கும் பரவியது. மேலும் அருகிலுள்ள கடைகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் சிக்கி சுபாஷ் குப்தாவின் சகோதரி பிரியங்கா குப்தா (வயது 23), தாய் உமா தேவி (வயது 70) மற்றும் மகள் மவுலி குப்தா (வயது 5) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுபாஷ் குப்தா, அவருடைய மனைவி, 2 வயதான மகன் மற்றும் தந்தை ஆகியோர் தீக்காயம் அடைந்துள்ளனர். மேலும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட, பொது மக்களும் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்ட தற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தீ விபத்தினால் 4 கடைகளும் சேதமடைந்துள்ளன.

 பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர்.


No comments:

Post a Comment