வைக்கம் வீரர் தந்தை பெரியார் நினைவிடத்தின் சீரமைப்புப் பணி நவம்பர் 30க்குள் முடிவுறும் வைக்கத்தைப் பார்வையிட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

வைக்கம் வீரர் தந்தை பெரியார் நினைவிடத்தின் சீரமைப்புப் பணி நவம்பர் 30க்குள் முடிவுறும் வைக்கத்தைப் பார்வையிட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தகவல்

வைக்கம், நவ.16 கேரள மாநிலம் வைக்கத்தில் தமிழ்நாடு அரசால் சீரமைக்கப்பட்டு வரும் பெரியார் நினைவிடத்தை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு அப்பணிகள் நவ.30க்குள் முடிக்கப்படும் என்றார்.

வைக்கம் போராட்டத்திற்கு வர லாற்றில் தனியிடம் உண்டு. கேரள மாநிலம் வைக்கம் என்ற ஊரில் உள்ள கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதையொட்டி வைக்கத்தில் பெரியா ருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு வைக்கம் போராட் டத்தின் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில் வைக்கத்தில் அமைந் துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 30.3.2023 அன்று அறிவித்தார். இதன் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்ச் சியாக சென்று பார்வையிட்டு வரு கிறார். அந்த வகையில் நேற்று (15.11.2023) வைக்கம் சென்றிருந்தார்.

தந்தை பெரியாரின் நினைவிடம் தரைதளம் மற்றும் முதல் தளத்தை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. இதில் நூலகம் 2,582 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது. அருங்காட்சியகம் 1,891 சதுரடி பரப்பளவில் அமைந்துள் ளது. 8.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 28.6.2023 அன்று தொடங் கப்பட்ட சீரமைப்புப் பணிகள் வரும் 30.11.2023க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விப ரத்தை அமைச்சர் எ.வ.வேலுவும் உறுதி செய்தார்.

தற்போது 1,891 சதுர அடியில் அமைந்திருந்த அருங்காட்சியகத்தை தரை தளம் மற்றும் முதல் தளம் 3,025 சதுர அடியில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய நூலக கட்டடத்தினை அகற்றி தரைதளத்தில் புதிய நூலகம் மற்றும் முதல் தளத்தில் தங்கும் அறைகள் என 3,457 சதுர அடிகளில் கட்டப்பட்டு வரு கின்றன. சிறுவர் பூங்கா மற்றும் திறந்த வெளி அரங்கம் ஆகியவற்றை சீரமைக் கும் பணிகளும் நடந்து வருகின்றன.

அருங்காட்சியக பூங்கா மேம் படுத்தும் பணிகளும், சுற்றுச்சுவரை பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளும், நுழைவு வாயில் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கேரளா மாநிலம் வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவிடம் சென்ற உடனே அமைச்சர், ஒவ்வொரு பணி யாக நேரில் பார்த்து ஆய்வு மேற்கொண் டார்.

அங்கு நூலகம் மற்றும் அருங் காட்சியகம் கட்டட பூச்சுப் பணி மற்றும் டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சிமெண்ட் பூச்சுப் பணிகளின் சிமெண்ட், மணல் ஆகிய வற்றின் தரத்தினை ஆய்வு செய்த அமைச்சர், டைல்ஸ் பதிக்கும் பணி களை ஆய்வு செய்தார். சுற்றுச்சுவர் மற்றும் இதர பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment