இஸ்லாமியர்கள் குறித்து மோசமான சித்தரிப்பு பா.ஜ.க. நபர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 23, 2023

இஸ்லாமியர்கள் குறித்து மோசமான சித்தரிப்பு பா.ஜ.க. நபர் கைது

மன்னார்குடி அக் 23  மாற்று மதத்தினரை புண்படுத்தும் வகையில் சமூகவலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், மேல பணங்காட்டாங் குடியை சேர்ந்தவர் சிவக்குமார் இவர் பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர். இவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் மாற்று மதத்தினர் மனம் புண்படும்படி அவதூறாக சித்தரித்தும், பொது மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் விதத்திலும் அவதூறான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

இது குறித்து கூத்தாநல்லூர் காவல்நிலையத்தில் முகமது சமீம் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் காவலர்கள், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சிவக்குமாரின் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்தனர்.இதை யடுத்து சிவக்குமாரை  கைது செய்து, மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment