கோவில் நிதியை பக்தர்கள் மேம்பாட்டுக்காக செலவிடுவது குற்றமா? அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 27, 2023

கோவில் நிதியை பக்தர்கள் மேம்பாட்டுக்காக செலவிடுவது குற்றமா? அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை, அக்.27 கோயில் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்றும் அதனை கொண்டு பக்தர்களின் மேம்பாட்டிற்காக செலவிடுவது குற்றமாகாது என்றும் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் ரூ.53.90 லட்சம் மதிப் பீட்டில் புதிய மரத்தேர் உருவாக்கும் பணி, ரூ.85.40 லட்சம் மதிப்பீட் டிலான அய்ந்து நிலை ராஜகோபுரம், ரூ.49 லட்சம் மதிப்பீட்டிலான அன்னதானக் கூடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேற்று (25.10.2023) தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:- மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிதியின் மூலம் ரூ.29 கோடி மதிப் பீட்டில் அமைக்கப்படும் புதிய கலாசார மய்யம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. இது முழு மையாக பக்தர்களின் பயன்பாட் டிற்காக கோவிலின் அறங்காவலர் களின் ஒப்புதலுடன் நமது கலை, கலாசாரம், பண்பாட்டை காக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. கோவிலின் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகின்றது. அதனைக் கொண்டு பக்தர்களின் மேம்பாட் டிற்காக செலவிடுவது குற்றமாகாது. ஆகவே சட்டத்திற்கு உட்பட்டு, அறங்காவலர் குழுவின் ஒப்புதலோடு அந்த நிதியை கலாசார மய்யத்திற்கு பயன்படுத்த இருக்கிறார்கள். இன்னும் 5 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவிற்கு குட முழுக்குகள் நடத்தப்படும். 

திராவிட மாடல் ஆட்சி ஏற் பட்ட பிறகு தான் கோவில்கள் அத்தனையையும் புனரமைக்கின்ற பணிகளில் முழு வீச்சோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். 5 ஆண்டுகள் நிறைவுறுகின்ற போது அனைவரும் புருவத்தை உயர்த்தி, வசை பாடுப வர்களும் வாழ்த்துகின்ற ஒரு நல்ல சூழ்நிலை உருவாகும்.

பொன்மாணிக்கவேல் மேற் கொண்ட பல்வேறு நடவடிக்கை களால் பல அப்பாவிகள் சிறை சென்றார்கள். விளம்பரத்திற்காக பொன் மாணிக்கவேல் தவறான குற்றச்சாட்டுகளை துறையின் மீது அள்ளித் தெளித்துக் கொண்டிருக் கிறார். தற்போது பணியில் இல்லாத காலத்திலும் அவர் மீது சி.பி.அய். முதற்கொண்டு நீதிமன்ற வழக்குகள் நிறைய இருக்கின்றன. அவர் குற்றம் அல்லது தவறுகளை குறிப்பிட்டு சொன்னால் நிச்சயமாக அதற்கு விளக்கம் தரவும், அதன் மீது நட வடிக்கை எடுக்கவும் இந்து சமய அற நிலையத்துறை தயாராக இருக் கின்றது. 

ஆளுநரை பொறுத்தளவில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அப்படி எல்லாம் முட் டுக்கட்டை போட்டுக் கொண்டிருக் கிறார். அவற்றை எல்லாம் முறிய டித்து தமிழ்நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு முதல்-அமைச்சர் அழைத் துச் சென்று கொண்டிருக்கிறார். அவர் தமிழ்நாட்டினுடைய ஆளுந ராகச் செயல்படவில்லை ஆர்.எஸ்.எஸ்.-ன் தமிழ்நாடு மாநில தலைவ ராகவும், பா.ஜ.க. மாநில தலைவ ராகவும் செயல்படுகிறார். மனிதனை பிரித்தாள்வது, ஜாதி, மத வேறு பாடுகளை ஏற்படுத்துவத போன்ற வற்றை தான் ஆளுநர் தன்னுடைய பணியாக மேற்கொண்டு இருக்கின் றார். ஆளுநருக்கு உண்டான பணி களிலிருந்து அவர் தவறி விட்டு இது போன்ற காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment