சென்னை, அக். 6 ஈரோட்டில் இயங்கி வரும் சக்திதேவி அறக் கட்டளை சார்பில், மேனாள் தலைமைச் செய லர் முனைவர் வெ. இறையன்பு அய்.ஏ.எஸ்., அண்மையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவா ரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் முனைவர் பி.சி. துரைசாமி, முனைவர் சாந்தி துரைசாமி ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். முனைவர் பி.சி. துரைசாமி அனை வரையும் வரவேற்று பேசி னார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றினார்.
மேனாள் தலைமை செயலர் முனைவர் வெ. இறையன்பு அய்.ஏ.எஸ். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பயனாளிகளான 150 ஆட்டோ ஓட்டுநர் களைப் புதிதாகப் பதிவு செய்து நலவாரிய உறுப் பினர் அட்டை மற்றும் 2 செட் சீருடைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வு ஈரோடு மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) முருகேசன், விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் சக்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் தன்வந்திரி மருத்துவ மனையின் மருத்துவப் பணியாளர்கள், ஆட் டோ ஓட்டுனர்கள், அவர்களின் குடும்பத்தா ருக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
No comments:
Post a Comment