பைசாபாத், அக்.22 அயோத்தியில் உள்ள பிரசித்திபெற்ற ஹனுமான்கர்ஹி கோயில் வளாகத்தில் துறவி ஒருவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. 18.10.2023 அன்று மாலை நடந்த இந்தக் கொலை தொடர்பாக ஒரு நபரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ராம் சஹாரே தாஸ் என்ற அந்த துறவி (44), கோயில் வளாகத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். அவர் கோயில் வளாகத்தில் புதன் கிழமை (18.10.2023) மாலை கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார். கோயிலில் வசிக்கும் ரிஷப் சுக்லா உள்பட 2 பேர் இக்கொலையில் ஈடுபட்டதாக சந்தே கிக்கப்படுகிறது. இதுகுறித்து, சாதுவின் உதவியாளர் காவல் துறை யில் புகார் அளித்துள்ளார். ரிஷப் சுக்லா தலைமறைவாக உள்ள நிலை யில், மற்றொரு நபரை பிடித்து விசா ரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
ஹனுமான்கர்ஹி கோயிலின் தலைமை பூஜாரி ராஜு தாஸ் கூறுகை யில், ‘கொலையான சாது, கடந்த 1991-ஆம் ஆண்டில் இருந்து அதாவது சிறுவனாக இருந்தபோதே கோயில் வளாகத்தில்தான் வசித்து வந்தார். கோயிலில் உள்ள ஒரு ஆசிரமத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த அவர், 8-10 குழந்தைகளுக்கு ஆன்மிக கல்வி போதித்து வந்தார். அவரது கொலை குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றார்.
No comments:
Post a Comment