சிதம்பரம் கோயிலில் அனுமதி இல்லாமல் அத்துமீறும் கட்டுமானப் பணிகள் தீட்சிதர்களின் நடவடிக்கையை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 18, 2023

சிதம்பரம் கோயிலில் அனுமதி இல்லாமல் அத்துமீறும் கட்டுமானப் பணிகள் தீட்சிதர்களின் நடவடிக்கையை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக் 18  சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமா னங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாகவும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களில் எந்த அனுமதியுமின்றி நூறு அறைகள் கட்டப்படுவதாகவும் கூறி, கோயில் தீட்சிதரான நடராஜ் தீட்சிதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார். 

அந்த மனுவில், நந்தவனம் அமைப் பதற்காக நூறு ஆண்டுகள் பழைமை யான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. அதனால் பொது தீட்சிதர்கள் குழுவால் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அனுமதியின்றி கட்டு மானங்கள் கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தரப்பிலும், தமிழ்நாடு தொல்லியல் துறை தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், கோயிலில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்.


No comments:

Post a Comment