தமிழ்நாடு அரசின் அறிவிப்பை ஏற்று இரண்டு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 6, 2023

தமிழ்நாடு அரசின் அறிவிப்பை ஏற்று இரண்டு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றன

சென்னை, அக்.6   தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பை யடுத்து, சென்னையில் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 2 ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர். முன் னதாக போராட்டம் நடத்தி யவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் அன்ப ழகன் கல்வி வளாகத்தில் கடந்த 10 நாட்களாக இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் தொடர் பட் டினிப் போராட்டம் இருந்து வந்தனர். அவர்களை தொடர்ந்து, கடந்த 7 நாட்களாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான பட்டதாரி ஆசிரி யர்களும் இரவு பகலாக தொடர் பட்டினிப் போராட் டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யாமொழி நேரடியாக இடைநிலை ஆசிரி யர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி, கோரிக் கைகள் குறித்து கேட்டார். முதலமைச்சரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்ப தாக கூறினார். ஆனாலும் இடைநிலை ஆசிரியர்கள் அதை ஏற்காமல் மீண்டும் போராட்டத்தை தொடர்ந் தனர். அவர்களை போலவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களு டன், பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும், பணி நிய மனத்துக்காக நடத்தப்படும் தேர்வை ரத்து செய்ய வேண் டும், தொகுப்பூதியத்திலாவது பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர். அப்போது, தகுதித் தேர்வு மற்றும் ஆசிரியர் நிய மனம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக் கிறது. அதற்கு பிறகு இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று இயக்குநர் தெரிவித்தார். அவரது பதிலில் திருப்தி அடையாத அவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வித்துறையை சேர்ந்தவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வியில் முடிந்ததால், மேற்கண்ட சங்கங்களை சேர்ந் தவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். 

இந்த  சூழ்நிலையில்,  தலை மைச் செயலகத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை, பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி சந்தித்தார். பிறகு  தலைமைச் செயலகத்தில் பத் திரிகையாளர்கள் சந்திப்பின் போது சில அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அப் போது, சமவேலைக்கு சம ஊதியம் கேட்கும் கோரிக் கையின் அடிப்படையில், 6ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, பல்வேறு துறைகளில் 1.6.2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண் பாடு குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிக்க 3 பேர் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது. இதை ஏற்று எண்ணும் எழுத்து திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடப்பதாலும், வேலை நிறுத்தப் போராட்டத்தை கை விட்டு மேற்கண்ட பயிற்சியில் சேருமாறும், பயிற்சியை முடித்து பள்ளிக்கு திரும்ப வேண்டும். 

மேலும், பகுதிநேர ஆசிரி யர்களுக்கு மாதம் ரூ.2500 ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 

ரூ.10 லட்சம் வரை மருத்துவ காப்பீடு அறிமுகம் செய்யப் படும். அதற்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத் தும். 

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 என்றும், இதர பிரிவினருக்கு 58 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. பல்வேறு வழக்குகள் ஆசிரி யர்கள் தெரிவு சார்ந்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட் டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.

 171 தற்காலிக தொழில் ஆசிரியர்களை முறையான ஊதிய விகிதத்துக்கு கொண்டு வரும் அரசாணை வெளியிடப்படும். 

பொது நூலகத்துறையில் நீண்ட நாட்களாக பணியாற் றும் ஊரக நூலகர்கள் 446 பேர் 3ஆம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்படும் என்றும், எனவே, போராட்டத் தில் ஈடுபடும் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். ஆனால், அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு களை ஏற்க மறுத்த ஆசிரி யர்கள் தொடர்ந்து பள்ளிக் கல்வி வளாகத்தில் போராட் டத்தில் ஈடுபட்டனர். அவர் களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து, பள்ளிக் கல்வி வளாகத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். போராட்டத்திற்கு அமைக்கப் பட்ட கூடாரங்களை அப் புறப்படுத்தவும், கலைந்து செல்லவும்  அறிவுறுத்தினர். 

ஆனால் ஆசிரியர்கள் கலைந்து செல்லவில்லை. எனவே, நேற்று (5.10.2023) காலையில் ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்று நுங்கம்பாக்கம் மற்றும் எழும்பூர் பகுதிகளில் உள்ள 7 திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். அவர்களை விடுவிக்க வாய்ப்பு இருந்தும் மீண்டும் போராட் டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் போராட் டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். அதன் தொடர்ச் சியாக அவர்கள் அங்கிருந்து வெளியேறி தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். மற்ற சங்கங்களை சேர்ந்தவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல்   தொடர்ந்தனர். பின்னர், தகுதித் தேர்வு எழுதி காத்திருப்போர் சங்கத்தினரும்  தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். ஆனால், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் மட்டும் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இதற்கிடை யில் கைது செய்யப்பட்ட ஆசி ரியர்கள் அனைவரும் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.  

No comments:

Post a Comment