பொன்விழா கண்ட மகளிர் காவல்துறை: அனைத்து மகளிர் காவல் துறையினருக்கும் பதக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

பொன்விழா கண்ட மகளிர் காவல்துறை: அனைத்து மகளிர் காவல் துறையினருக்கும் பதக்கம்

சென்னை, அக்.22 காவல் துறையில் பெண்கள் பணிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி, அவர்களைக் கவுரவிக் கும் வகையில் அனைத்து பெண் காவலர்களுக்கும் சிறப்பு பதக்கம் வழங்கப்பட உள்ளது. 

தமிழ்நாடு காவல் துறையில் சட்டம் - ஒழுங்கு, குற்றம், போக் குவரத்து, புலனாய்வு உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட காவ லர்கள் பணியில் உள்ளனர். தமிழ் நாடு காவல் துறையின் சிறப்பான செயல்பாட்டால் ராணுவம், துணை ராணுவத்துக்கு வழங்கப் படும் உயரிய கவுரவமான ‘குடி யரசுத் தலைவரின் வண்ணக்கொடி‘ தமிழ்நாடு காவல் துறைக்கு 31.07.2022 அன்று வழங்கப்பட்டது. இதற்காக வழங்கப்பட்ட சிறப்பு லோகோ தற்போது அனைத்து காவலர்களின் சீருடையையும் அலங்கரித்து வருகிறது. 

தமிழ்நாடு காவல்துறை 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே படிப்படியாக வளர்ச்சியடைந் தாலும் 1973-ஆம் ஆண்டுதான் காவல் துறையில் பெண்கள் அடியெடுத்து வைத்தனர். முதன் முதலில், ஒருகாவல் உதவி ஆய் வாளர் (எஸ்.அய்), ஒரு தலைமைக் காவலர், 20 காவலர்கள் என 22 பெண் காவலர்களே பணி யில் சேர்ந்தனர். அதன் பின்னர் காவல் துறையில் பணியாற்றும் பெண் களின் எண்ணிக்கை படிப் படியாக உயர்ந்தது.

தற்போது ஒரு காவல்துறை தலைமை இயக்குநர்  2 கூடுதல் காவல்துறை தலைமை இயக்கு நர்கள் 14 காவல் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள், காவல்துறை கண்காணிப்பாளர் கள், கூடுதல் கண்காணிப்பாளர் ஆய்வாளர்கள், உதவி ஆய்வா ளர்கள், காவலர்கள் என தற் போது, 35 ஆயிரத்து 329 பெண் காவலர்கள் பணியில் உள்ளனர். 

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் பணிக்கு வந்து இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதை யடுத்து கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் தலைமையில், மகளிர் காவலர்களின் ‘பொன் விழா’ கொண்டாட்டப்பட்டது. இந்நிலையில், பெண் காவலர்களை கவுரவிக்கவும், அவர்கள் காவல் பணிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பெருமைப் படுத்தும் வகையிலும், தமிழ் நாட்டில் பணியில் உள்ள காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான அனைத்து பெண் காவலர்களுக்கும் சிறப்பு பதக்கம் வழங்க அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ள னர். அதற்கான ஆரம்பகட்டப் பணி தொடங்கி உள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சட்டம்-ஒழுங்கு,குற்றப்பிரிவு, ரயில்வே காவல், சிபிசிஅய்டி, போக்குவரத்து, உளவுத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை, சிறப்பு காவல் படை, இணைய குற்ற தடுப்பு பிரிவு, கமாண்டோ படை, முதலமைச்சரின் பாதுகாப்பு படை என அனைத்துப் பிரிவு களிலுமே பெண் காவலர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றுகின் றனர். சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்களில் உள்ள 1,356 ஆய்வாளர் பணியிடங்களில், 503 காவல் ஆய்வாளர்கள் பெண்கள். அதாவது, சட்டம் - ஒழுங்கு பாது காப்பில் 37 சதவீதம் பெண்காவல் ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். தற்போது, அவர்கள் பணிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதைகவுரவிக்கும் வகை யில் சிறப்பு பதக்கம் வழங்குவது அனைவருக்கும் பெருமை. இது பெண்கள் முன்னேற்றத்துக்கு மேலும் உந்துதலாக இருக்கும்’’ என்றனர்.


No comments:

Post a Comment