பாபா ராம்தேவ் சிக்குவாரா? உச்சநீதிமன்றம் தாக்கீது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 10, 2023

பாபா ராம்தேவ் சிக்குவாரா? உச்சநீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, அக்.10  பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் கரோனா பெருந்தொற்று காலத்தில் ஒரு காட்சிப் பதிவை வெளியிட்டார். 

அதில், “அலோபதி மருத்துவம் முட்டாள்தனமான அறிவியல். ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர் களைவிட அலோபதி மருந்துகளால் தான் அதிகம் பேர் உயிரிழந்தனர். முதலில் ஹைட்ராக்சிக்ளோரோக் வின் தோல்வி அடைந்தது. பின்னர் ரெம்டிவிசிர் தோல்வியுற்றது. பின்னர் பிளாஸ்மா தெரபிதடை செய்யப்பட்டது. ஸ்டீராய்டுகளும் தோல்வியடைந்தன. இவர்மெக்டின் உள்ளிட்ட மருந்துகளும் தோல்வி அடைந்தன’’ என்று குற்றம் சாட் டினார். பாபா ராம்தேவின் கருத்தை எதிர்த்து பீகார் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.   இதுதொடர்பாக ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் விரி வான பதில் மனுக்களை தாக்கல் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தால் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment