பிஜேபி ஆளும் அசாம் இதுதான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

பிஜேபி ஆளும் அசாம் இதுதான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள்

குவஹாத்தி, அக்.5  குழந்தை திருமணங்களுக்கு காரணமான 1,039 ஆண்களை அசாம் காவல்துறையினர்  3.10.2023 அன்று கைது செய்தனர். சட்டப்படியான திருமண வயதுக்கு குறைவானவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சம்பவம் அசாம் மாநிலத்தில் அதிகளவில் நடைபெறுகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது அசாம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் சட்டவிரோதமாக திருமணங்கள் நடைபெறுவதாக கிடைத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில், சட்டவிரோதமாக குழந்தை திரும ணங்களை நடத்தி வைத்த பெற்றோர், மத குருக்கள் என நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

கடந்த 5 ஆண்டுகளில் குழந்தை திருமணங்களுக்கு காரணமான 3,907 பேர் கைது செய்யப்பட்டனர். இவர் களில் 3,319 பேர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய் யப்பட்டதாக அசாம் சட்டப் பேரவையில் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த மாதம் 11ஆ-ம் தேதி தெரிவித்தார். இந்நிலையில், குழந்தை திருமணங்கள் நடைபெற்ற தாக வந்த புகார்களின் அடிப்படையில் நேற்று காலை 1,039 பேரை அசாம் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது அதிகரிக்கும்: இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘குழந்தை திருமணத்துக்கு காரணமானவர்கள் மீது மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது’’ என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment