மகளிர் இட ஒதுக்கீடு மசோதா : ஒப்பம் அளித்தார் குடியரசுத் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 1, 2023

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா : ஒப்பம் அளித்தார் குடியரசுத் தலைவர்

புதுடில்லி, அக்.1 வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோ தாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள் ளார். 

மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் பெண் களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் மசோதாவாக இம் மாதம் நிறைவேற் றப்பட்டது. 

மக்களவையில் இம் மசோதா கடந்த 19ஆ-ம் தேதியும் மாநிலங்களவையில் 21ஆ-ம் தேதியும் நிறைவேற்றப் பட்டது. மக்களவையில் இதற்கு ஆதரவாக 454 உறுப் பினர்கள் வாக்களித்தனர். ஏஅய் எம்அய்எம் கட்சியின் 2 நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மட்டுமே எதிராக வாக்களித்தனர். முஸ்லிம் பெண்கள் மற்றும் ஓபிசி பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று அக்கட்சி காரணம் கூறியது. காங்கிரஸ் கட்சியும் ஓபிசி பெண்களுக்கு உள்ஒதுக் கீட்டை வலியுறுத்தியது. 

புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகே மகளிர் இடஒதுக்கீடு நடை முறைக்கு வரும் என்ற நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் 2024 மக்களவைத் தேர்தலிலேயே இதனை அமல்படுத்த வலியுறுத்தினர்.

இதையடுத்து, இம் மசோதா மாநி லங்களவையில் விவாதிக்கப்பட்டு, கடந்த 21-ஆம் தேதி ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. 215 உறுப் பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித் தனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இம்மசோதா நிறை வேறியதை தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. 

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று (29.9.2023) ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த மசோதா சட்டமாக மாறியது. இதனை ஒன்றிய அரசு தனது அரசி தழில் அறிவிக்கையாக வெளியிட்டுள் ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் ஆகும் என்பதால் 2029 தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 1996ஆ-ம் ஆண்டு அப்போதைய பிரத மர் தேவகவுடா ஆட்சியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நிறைவேற்றப்பட வில்லை. 1998-இல் மேனாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இம்மசோதா மீண்டும் அறி முகம் செய் யப்பட்டது. அப்போதும் போதிய ஆதரவு இல்லாத தால் மசோதா காலாவதி யானது. 1999, 2002, 2003ஆ-ம் ஆண்டுகளில் மசோதா தாக் கல் செய்யப்பட்டு நிறைவே றாமல் போனது. 2010இ-ல் இம்மசோதா மாநிலங்கள வையில் நிறைவேற்றப்பட் டது. ஆனால் மக்களவையில் நிறை வேற்ற முடியவில்லை. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு  மசோதா நிறைவேற்றப் பட்டு உள்ளது.


No comments:

Post a Comment