கந்தர்வகோட்டை, அக். 19- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளியில் உலக உணவு நாளை முன்னிட்டு கருத்த ரங்க நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்றார்.வார்டு உறுப்பினர் கலா ராணி முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வக்கோட்டை ஒன்றிய வட் டாரத் தலைவர் ரஹ்மத்துல்லா பேசியதாவது:--
உலக உணவு நாள் என்பது ஆண்டுதோறும் அக்டோபர் 16 அன்று கடைபிடிக்கப்படும் ஒரு உலகளாவிய முன்முயற்சியாகும். இது பசி, உணவுப் பாதுகாப்பு மற்றும் சரியான ஊட்டச்சத்துக் கான அணுகல் போன்ற அழுத்த மான பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. உலக உணவு நாளின் வேர்கள் 1945ஆம் ஆண்டு அய்க்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நிறுவப்பட்டது.
இருப்பினும், 1979ஆம் ஆண்டு வரை உலக உணவு மாநாட்டின் போது, உலக உணவு நாள் அதி காரப்பூர்வமாக உலகளாவிய விடு முறை நாளாக அங்கீகரிக்கப் பட்டது.
உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டா டவும் ஊக்குவிக்கவும் 150க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந் தன. உலக உணவு நாளின் கருப் பொருள் நீர்தான் உயிர், தண்ணீரே உணவு. யாரையும் விட்டுவிடா தீர்கள்.
இந்த தீம் உணவு உற்பத்தி, ஊட் டச்சத்து மற்றும் வாழ்வாதாரங்களில் நீரின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது. பூமியில் வாழ்வதற்கு நீர் இன்றியமையா தது மற்றும் உணவின் முதன்மை ஆதா ரமான விவசாயத்தில் அடிப் படைப் பங்கு வகிக்கிறது. இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப் பினர்கள் மற்றும் பெற் றோர்கள் கவுதமி, ராஜலட்சுமி, சீதாலெட் சுமி, ரஞ்சிதா, விக்டோ ரியா ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். நிறைவாக ஆசிரியை நிவின் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment