புதுடில்லி, அக.19 ராமர் பிறந்த இடமாக கருதப்படும் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராம ஜென்மபூமி யில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் கட் டுமானத்துக்கு வெளிநாடு களில் இருந்து நன்கொடைகள் பெறுவதற்கு ஒன்றிய உள் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர் பாக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய், 'எக்ஸ்' தளத்தில் வெளி யிட்ட பதிவில் கூறியிருப்ப தாவது:-
'ராமர் கோவில் கட்டு மானத்துக்கு வெளிநாடுகளில் இருந்து, வெளிநாட்டு பங் களிப்பு ஒழுங்குபடுத்தல் சட் டப்படி நன்கொடைகள் பெற ஒன்றிய உள்துறை அமைச் சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோன்ற நன்கொடை களை, டில்லி சன்சத் மார்க்கில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளையில் உள்ள ராமர் கோவில் அறக்கட்ட ளையின் கணக்குக்கு மட் டுமே அனுப்ப வேண்டும்.'
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment