மேட்டூர் அணை நீர் மட்டம் மீண்டும் உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 20, 2023

மேட்டூர் அணை நீர் மட்டம் மீண்டும் உயர்வு

தருமபுரி, அக்.20 மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் (18.10.2023) விநாடிக்கு 6,846 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 7,355 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணைக்கு வரும் நீரின் அளவைவிட, நீர் திறப்பு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 45.62 அடியாகவும், நீர் இருப்பு 15.16 டிஎம்சியாகவும் இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 16-ஆம் தேதி காலை விநாடிக்கு 6,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து பின்னர் 6 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. கடந்த 17, 18-ஆம் தேதிகளிலும் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாகவே நீர்வரத்து நீடித்தது. நேற்று இந்த நீர்வரத்து அதிகரித்தது.


No comments:

Post a Comment