இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின்மீது தாக்குதல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 28, 2023

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின்மீது தாக்குதல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்!

நேற்று (27.10.2023) இரவு சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தின்மீது பாட்டில், கற்கள் வீச்சு முதலியவை நடத்தப்பட்டன என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைகிறோம். வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது சம்பந்தமாக அந்நிகழ்வில் ஈடுபட்டவர்கள் பெரிதும் கருவிகளாகவே இருக்கக் கூடும்; அதன் முழுப் பின்னணியை சரியாக விசாரித்து, உரிய நடவடிக்கையை சென்னை மாநகர காவல் துறையும், உளவுத் துறையினரும் எடுக்கவேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் உருவாக்க அரசியல் எதிரிகளின் திட்டமிட்ட நடவடிக்கையா என்பதும் ஆராயப்படவேண்டும்.

தொடர்ந்து வன்முறைகள் தி.மு.க. ஆட்சியில் நடக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்கும் சதியையும் அலட்சியப்படுத்த முடியாது - எச்சரிக்கை!

 கி.வீரமணி
தலைவர்,

திராவிடர் கழகம்
28.10.2023

கடைசி செய்தி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம்மீது பாட்டில்களை வீசி தாக்கு தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment