5 அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் முதன்மை செயலாளர் அமுதா அய்.ஏ.எஸ். உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 29, 2023

5 அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் முதன்மை செயலாளர் அமுதா அய்.ஏ.எஸ். உத்தரவு

சென்னை, அக்.29 தமிழ்நாட்டில் 5 அய்.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா அய்.ஏ.எஸ். உத்தரவிட் டுள்ளார். 

அதன்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி துணைக் கோட்டம், துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.பிருந்தா  சேலம் வடக்கு மாநகர துணை காவல் ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் துணைக் கோட்டம், துணை காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால்  ஆவடி சட்டம் மற்றும் ஒழுங்கு துணை காவல் ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சேலம் வடக்கு மாநகர துணை காவல் ஆணையர், கவுதம் கோயல் அய்பிஎஸ்., தாம்பரம் காவல் ஆணை யரகத்தில் பள்ளிக்கரணை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை காவல் ஆணையராக நிய மிக்கப்பட்டுள்ளார். ஆவடி சட்டம் மற்றும் ஒழுங்கு துணை காவல் ஆணையர், என்.பாஸ்கரன், தமிழ்நாடு சிறப்புக் காவல் பட்டாலியன் மதுரை கமாண் டன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். 

சுகுணா சிங்  சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக நியமிக் கப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment