4 மாத குழந்தைக்கு மறுவாழ்வு கொடுத்த அறுவைச் சிகிச்சை : கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை சாதனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 26, 2023

4 மாத குழந்தைக்கு மறுவாழ்வு கொடுத்த அறுவைச் சிகிச்சை : கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை சாதனை!

சென்னை, அக். 26 - பிறந்ததில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தைக்கு கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து மறு வாழ்வு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி இணையரின் 4 மாத பெண் குழந்தை டேவினா. பிறவியிலேயே மேல் தாடை பிளவு, கீழ் தாடை வளர்ச்சியின்மை மற்றும் நாக்கு உள்ளே இருத்தல் (பியரின் ராபின் சின்ரோம்) பிரச்சினையால் பாதிக்கப்பட் டிருந்தார்.

மேலும் பிறந்ததில் இருந்தே மூச்சுவிடுவதில் சிரமம் இருந் துள்ளது. பால் குடித்தாலும், அந்த பால் மூக்கின் வழியாக வெளியேறும் பிரச்சினை இருந்தது.

குழந்தையை நேராக படுக்க வைத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல் முழுவதும் நீல நிறமாக மாறிவிடும். இதனால், குழந்தையை 24 மணி நேரமும் தாயும், தந்தையும் மாறி மாறி தோள்மீது தூங்க வைத்து வந்துள்ளனர்.

குழந்தையை காப்பாற்ற திருநெல்வேலி அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பெற்றோர் சென் றனர். சென்னைக்கு செல்லும் படி அம்மருத்துவர்கள் அறி வுறுத்தியதால் சென்னைக்கு வந்தனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரூ.4 லட்சம் வரை செலவாகும் என்று கூறியதால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத் துவமனைக்குச் சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் பரிந்துரையின்படி கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர்.

மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி அறிவுறுத்தலின் படி, முகச்சீரமைப்பு நிபுணர் எஸ்.பி.சேதுராஜன், மயக்கவி யல் மருத்துவர்கள் கார்த்தி கேயன், அருள்ராஜ், சண்முகப் பிரியா ஆகியோர் கொண்ட குழுவினர் `நாக்கு உதடு ஒட்டு தல்’ அறுவை சிகிச்சை செய் தனர். சுமார் 2 மணி நேர சிகிச் சையின் மூலம் உள்ளே இருந்த நாக்கு வெளியே கொண்டு வரப்பட்டது.

அதேபோல், வளர்ச்சியின் மையால் பின்னால் இருந்த கீழ் தாடையும் முன்னுக்கு கொண் டுவரப்பட்டது. மேல் தாடை பிளவு பிரச்சினைக்கு குழந்தை யின் ஒரு வயதில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவ மனை இயக்குநர் பார்த்தசாரதி, முகச்சீரமைப்பு நிபுணர் எஸ்.பி.சேதுராஜன் கூறும் போது, “அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தை நலமுடன் உள்ளது. குழந்தை நன்றாக பால் குடிக்கிறது. எவ்வித சிரமமும் இன்றி குழந்தை தூங்குகிறது.

தொட்டிலில் குழந்தையை பெற்றோர் தூங்க வைக்கின் றனர்.

பிறந்ததில் இருந்தே சரியாக பால் குடிக்க முடியாததால் 8 கிலோ இருக்க வேண் டிய குழந்தை 4 கிலோதான் உள்ளது. அதனால், குழந்தை யின் எடை அதிகரித்ததும், ஒருவயதில் குழந்தைக்கு மேல் தாடை பிளவுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

 தனியார் மருத்துவமனையில் ரூ.4லட்சம் வரை செலவாகும் இந்தஅறுவை சிகிச்சை இந்த மருத்துவமனையில் இலவச மாக செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

No comments:

Post a Comment