வங்கிகளில் காலி பணி இடங்களை நிரப்பிடுக! டிசம்பர் 4 முதல் ஜனவரி 20 வரை வேலை நிறுத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 9, 2023

வங்கிகளில் காலி பணி இடங்களை நிரப்பிடுக! டிசம்பர் 4 முதல் ஜனவரி 20 வரை வேலை நிறுத்தம்

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு

சென்னை, அக். 9-  வங்கி களில் காலிப் பணியிடங் களை நிரப்பக் கோரியும், நிரந்தரப் பணியிடங்க ளில் அயல்பணி மூலம் ஆட்களை நியமிப்பதைக் கண்டித்தும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள் ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செய லாளர் சி.எச்.வெங்கடாச் சலம் வெளியிட்ட செய் திக் குறிப்பு:

மக்களுக்கு பொதுச் சேவை வழங்குவதில் வங்கிகள் முக்கியப் பங் காற்றி வருகின்றன. நாட் டில் உள்ள வங்கிகள் அனைத்தும் கடந்த 1969ஆ-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டன. 

அதன் பிறகு, நாட் டின் அனைத்துப் பகுதி கள் மட்டுமின்றி குக்கிரா மங்களிலும் வங்கிக் கிளைகள் திறக்கப்பட் டன. அண்மைக்காலமாக வங்கி வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதேபோல், வங்கிப் பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளன. இதனால், வங்கி ஊழியர் களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது.

அதே சமயம், வங்கி களில் போதிய அளவுக்கு ஊழியர்கள் பணிய மர்த்தப்படு வது இல்லை.

ஊழியர்கள் ஓய்வு பெறுதல், பதவி உயர்வு மற்றும் ஊழியர் கள் இறத்தல் போன்ற சமயங் களில் காலியாகும் பணியிடங்கள் மீண்டும் நிரப் பப்படுவதில்லை. 

வங்கிகளில் வர்த்தகம் அதிகரிக்கும்போது கூடு தல் ஊழியர்களும் நிய மிக்கப்படுவதில்லை. அதிகளவு அரசு திட்டங் கள் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின் றன. ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம், 50 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 

இதன் மூலம், வங்கிக் கிளைகளில் பணிச்சுமை அதிகரித்துள்ளது. ஊழி யர் பற்றாக்குறை காரண மாக வாடிக்கையாளர் களுக்கு சிறந்த சேவை வழங்க முடிவதில்லை. 

இதனால், வாடிக்கை யாளர்களுக்கும், ஊழியர் களுக்கும் அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது. 

மேலும், எழுத்தர் (கிளார்க்) போன்ற நிரந்தர பணிகளுக்கு அதிகளவு ஊதியம் வழங்கும் என் பதற்காக, அதைத் தவிர்க் கும் வகையில் அப் பணிக்கு அயல்பணி மற் றும் ஒப்பந்த அடிப்படை யில் ஊழியர்களை நிய மிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது.

எனவே, வங்கிகளில் போதிய ஊழியர்களை நியமிக்கக் கோரியும் நிரந் தரப் பணியிடங்களில் அயல்பணி மூலம் ஆட் களை நியமிப்பதைக் கண்டித்தும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது.

இதன்படி, வங்கிகள் தனித்தனியாக வரும் டிச.4-ஆம் தேதி முதல் 11ஆ-ம் தேதி வரையிலும், மாநில அளவிலான வேலை நிறுத்தம் ஜன.2 முதல் 6ஆ-ம் தேதி வரை யிலும், ஜன.19 மற்றும் 20ஆ-ம் தேதி அகில இந்திய அளவில் 2 நாட்க ளும் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட் டுள்ளது. இவ்வாறு சி.எச். வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment