ஆயுத பூஜை கொண்டாடிய 3 மணி நேரத்தில் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீ விபத்து : ஆவணங்கள் எரிந்து நாசம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 23, 2023

ஆயுத பூஜை கொண்டாடிய 3 மணி நேரத்தில் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீ விபத்து : ஆவணங்கள் எரிந்து நாசம்!

திங்கட்கிழமை விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை அன்று திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

காரைக்காலை எடுத்த திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (20.12.2023) மாலை ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் ஊழியர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். இரவு காவல் பணியில் ஆரிப் என்பவர் இருந்தார்.

இரவு ஒன்பது மணிக்கு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத் தில் கணக்கு பதிவேடுகள் அறையில் இருந்து புகை வருவதை கண்ட காவலாளி ஆரிப் உடனே ஆணையர் மற்றும் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து அருகில் இருந்த சிலருடன் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும் திருநள்ளாறு சுரக்குடி தீயணைப்பு நிலைய முதன்மை தீயணைப்பு வீரர் சங்கர் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் அலுவலக அறையில் இருந்த கணினி மற்றும் பிரிண்டர்கள் மேஜை, நாற்காலி மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. இது குறித்து திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆயுத பூஜை கொண்டாடிய சில மணி நேரங்களில் அலுவலகத்தில் இருந்த ஆயுதங்களும் ஆவணங்களும் எரிந்து நாசமானது. எந்தக் கடவுளும் இதனை காப்பாற்ற வில்லை.

No comments:

Post a Comment