சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 14, 2023

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

சென்னை,அக்.14- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, புதிதாக இரண்டு கூடுதல் நீதிபதிகள் நிய மிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்குரைஞர்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப் பட்ட இருவரும் 2 ஆண்டுகள் பணியாற்றுவார்கள். இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி களின் எண்ணிக்கை 65 ஆக அதி கரித்துள்ளது.

No comments:

Post a Comment