ஆப்கன் நில அதிர்வில் உயிர் இழப்பு 2060 பேர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 9, 2023

ஆப்கன் நில அதிர்வில் உயிர் இழப்பு 2060 பேர்

காபூல், அக்.9  ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில அதிர்வில் 2,060 பேர் உயிரிழந்தனர். 10,000-க்கும் மேற்பட் டோர் படுகாயம் அடைந்தனர். 

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஹெராத் மாகாணம் உள்ளது. இந்த மாகாண தலைநகர் ஹெராத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 7.10.2023 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை அடுத்தடுத்து 4 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இவை ரிக்டர்அலகில் 5.5, 5.9, 6.2, 6.3 என்றுபதிவாகின. 

தொடர்ந்து பலமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இதனால் ஹெராத் பகுதியில் 12 கிராமங்கள் முழுமையாக நாச மாகின. 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளில் சிக்கி 2,060 பேர் உயிரிழந்தனர். 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அய்.நா. சபை, செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்டவை மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அமைப் புகள் சார்பில் 5 தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, காய மடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செஞ்சிலுவை சங்கத்தின் செய்தி தொடர்பாளர் இர்பா னுல்லா கூறும்போது, 

“எங்கள் அமைப்பின் 7 குழுக்கள் மீட்புப் பணி, மருத்துவ சேவை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வீடுகளை இழந்தோ ருக்காக தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளோம்’’ என்றார்.

அய்.நா. சபை சார்பில், பாதிக் கப்பட்ட பகுதிகளில் 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வீடுகளை இழந்தோருக்காக உணவு வகைகள், தற்காலிக கூடாரங்கள் வழங் கப்பட்டு வருகின்றன. உலக சுகா தார அமைப்பு சார்பில் அத்தியா வசிய மருந்து பொருட்கள் ஹெராத் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளன. அங்கு மீட்பு பணியில் ஈடுபட் டுள்ள தன்னார்வலர்கள் கூறிய தாவது: ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மதம் சார்ந்த விவகாரங்களில் மட்டுமே கவனம்செலுத்தப்படுகிறது. அடிப்படை வசதிகளை மேம்படுத்த வில்லை. ஹெராத் பகுதியில் மக்கள், கையால் மண்ணை தோண்டி மீட்பு பணியில் ஈடுபடுவது பரிதாபமாக உள்ளது. மீட்பு பணியில் உள்ளதொய்வின் காரணமாக உயிரிழப்பு அதிகரித்திருக்கிறது. 

அய்.நா. சபை, செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் மீட்பு பணியில் ஈடு படாமல் இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். ஹெராத் பகுதியில் மீண்டும் மிகப் பெரிய அளவில் நில அதிர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதால், எச்சரிக்கையாக இருக்க மக்களை அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment