ஒன்றிய அரசு தூங்குகிறதா? ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் அட்டூழியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 29, 2023

ஒன்றிய அரசு தூங்குகிறதா? ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேஸ்வரம், அக் 29 எல்லைத்தாண்டி சென்று மீன்பிடித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட் டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று (28.10.2023) கைது செய்தது. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற் படையினர் கைது செய்தனர். மேலும், மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment