அந்தோ! புலவர் வேட்ராயன் மறைந்தாரே! தமிழர் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 17, 2023

அந்தோ! புலவர் வேட்ராயன் மறைந்தாரே! தமிழர் தலைவர் இரங்கல்

தருமபுரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், கழகமே மூச்சு என்று பாடுபட்ட வரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான மானமிகு புலவர் வேட்ராயன் அவர்கள் சாலை விபத் தில் இன்று காலை  (17.9.2023) மரணமுற்றார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

தருமபுரி மாவட்டக் கழகத் திற்குப் பெருந் தூணாக விளங்கி யவர்; கட்டுப்பாடுமிக்க கழகப் போராளி!

அவர் பிரிவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; கழகத் திற்கே பெரும் இழப்பாகும். அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியுள்ள குடும்பத்தினருக்கும், கழகத் தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

அவர்தம் அரும்பெருந் தொண்டுக்கு வீரவணக்கம் செலுத்து கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.9.2023

 குறிப்பு: தலைமைக் கழக அமைப்பாளர்  ஊமை செயராமன் தலைமையில் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துவர்.


No comments:

Post a Comment