மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டை : அமைச்சர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 8, 2023

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை, செப்.8  மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு அரசுபோக்குவரத்துக் கழகங்கள் சார்பில் பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படுகிறது.

இந்த பயண அட்டைகளை இணையவழியில் வழங்கும் நடை முறை தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவித்திருந்தார். 

இந்த அறிவிப்பை செயல் படுத்தும் வகையில், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நிறுவனத்துடன் இணைந்து, இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டையை பெற்றுக் கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்கட்டமாக, சென்னை  மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்கப்படும் பயண அட்டைகளை இணைய வழியில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற் கான வசதியை சென்னை தலை மைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் நேற்று  (7.9.2023) தொடங்கி வைத் தார். 

இதன்மூலம், வீட்டின் அரு கில் உள்ள இ-சேவை மய்யத்தில் அல்லது tn.e.sevai என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து, அதற்குரிய ரசீது பெற்றுக் கொள் ளலாம். இதற்கான உரிய குறுஞ்செய்தி பெறப்பட்ட பின்னர், பயணஅட்டையை ஏ4 தாள் அல்லது பிளாஸ்டிக் அட் டையில் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், போக்கு வரத்துத் துறைச் செயலர் க.பணீந் திர ரெட்டி மற்றும் துறை அதிகா ரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment