தந்தை பெரியார் கண்ட கனவை நிறைவேற்றுவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 10, 2023

தந்தை பெரியார் கண்ட கனவை நிறைவேற்றுவோம்!

கவிஞர் கனிமொழி எம்.பி.,

கோவில்பட்டி, செப்.10 தந்தை பெரியார் கண்ட கனவை நிறைவேற்றுவோம் என்றார் திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினருமான கவிஞர் கனிமொழி.

கடந்த 8.9.2023 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டியில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்று கவிஞர் கனிமொழி எம்.பி., உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பல மாநி­லங்­க­ளில் பல இடங்­க­ளில் இன்றும் பள்ளிக் கூடங்­களே கிடை­யாது. ஆனால் தமிழ்­நாட்­டில் பள்ளிக் கூடங்கள் இல்­லாத இடங்களே கிடை­யாது. பெருந்­த­லை­வர் காம­ரா­ஜ­ரில் தொடங்கி இன்று வரை பள்­ளிக்­கூ­டங்­கள் உயர் கல்­விக்­கான கல்­லூ­ரி­கள் என்று ஒவ்வொரு அர­சும் தொடர்ந்து பணி செய்து இருக்­கி­றது. இது சமூக நீதிக்­கான போராட்ட வர­லாற்­றிலே மிக முக்­கி­ய­மான பகுதி.

பள்­ளி­கள் இருந்­தும் மாண­வர்­கள் பள்­ளிக்­கூ­டங்­க­ளுக்கு பெரிய அள­வில் வர­வில்லை. அப்­போது சென்­னை­யிலே ஜஸ்­டிஸ் பார்ட்டி அரசு பள்­ளி­க­ளில் மதிய உணவு என்­பதை சிறிய அள­வில் கொண்டு வரு­கி­றார்­கள். அதை அவர்­க­ளால் மேற்­கொண்டு எடுத்து செல்ல முடி­ய­வில்லை. அதற்­குப் பிறகு பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் முதலமைச்­ச­ராக பொறுப்­பேற்ற பிறகு மாண­வர்­கள் பள்ளிக்கூடங்க­ளுக்கு வந்து படிக்­கா­மல் மாடு மேய்த்­துக் கொண்டிருந்ததை பார்க்­கி­றார். ‘‘ஏன் மாடு மேய்க்­கி­றீங்க பள்ளிக்கூடத்­துக்கு போக­லையா'' என்று கேட்ட­போது, ‘நான் மாடு மேய்க்­காம பள்­ளிக்­கூ­டத்­துக்கு போனா நீ சாப்­பாடு போடு­வியா?’ என்று அந்த மாண­வர்­கள் கேட்­டார்­கள்.

காம­ரா­ஜர் உரு­வாக்­கிய மதிய உணவுத்திட்­டம்!

சென்னை வந்த முத­ல­மைச்­சர் காம­ரா­ஜர் பள்­ளி­க­ளில் மதிய உணவு திட்­டத்தை உரு­வாக்கி காட்­டி­னார். அதற்­குப் பிறகு தொடர்ந்து வந்த ஆட்­சி­யி­னர் அது எந்த ஆட்­சி­யாக இருந்­தா­லும் தி.மு.க.வாக இருக்­கட்­டும், அ.தி.மு.க.வாக இருக்கட்­டும் யாரும் அந்­தத் திட்­டத்தை நிறுத்­த­வில்லை. அதை இன்­னும் விரிவு படுத்­திக் கொடுத்­தார்­கள்.

ஒன்­றிய அர­சாங்­கம் 2035 இல் 50 சத­வீ­தம் மாண­வர்­களை உயர்கல்­விக்கு கொண்டு செல்ல வேண்­டும் என்ற இலக்கு வைத்திருக்கி­றது. ஆனால், தமிழ்­நாட்­டில் உயர்­ கல்­விக்கு செல்­லும் மாண­வர் கள் விகி­தம் சென்ற ஆண்டு 52 சத­வீ­தத்தை தாண்டி விட்டோம். இதற்கு கார­ணம் அந்த பிள்­ளை­கள் படிக்க வேண்­டும் என்­ப­தற்­காக நாம் தொடர்ந்து செய்­தி­ருக்­கிற முயற்­சி­கள்.

கல்­லூ­ரி­களை உருவாக்­கிய தலைவர் கலைஞர்!

பிள்­ளை­க­ளுக்கு திரு மணம் செய்ய வேண்­டும் என்­ ப­தற்­காக படிப்பை நிறுத்தி விடக்­கூ­டாது.அதனால்­ தான் திரு­மண உத­வித் தொகை திட்­டத்தை தலை­வர் கலை ஞர் கொண்டு வந்­தார். எட் டா­வது வரை படிக்க வையுங் கள், பத்­தா­வது வரை படிக்க வையுங்­கள், உங்கள் மகளை நாங்­கள் திரு­ம­ணம் செய்து தரு­கி­றோம் என்று ஒரு அரசு இருக்­கி­றது என்­றால்... அந்த மாண­வர்­க­ளின் கல்வி மீது அர­சுக்கு எவ்­வ­ளவு அக்­கறை இருக்க வேண்­டும்!

கல்­லூ­ரி­கள் ரொம்ப தூரத்­ தில் இருந்­தால் அனுப்ப மாட் டார்­கள். குறிப்­பாக பெண் பிள்­ளை­களை அனுப்­பவே மாட்­டார்­கள். அவர்களுக்கு  ஊருக்கு அரு­கி­லேயே கல் லூ­ரி­களை உரு­வாக்­கி­னால் அவர்­கள் நிச்­ச­ய­மாக படிக் கும் வாய்ப்பு உண்­டா­கும் என்­ப­தற்­காகத் தான் தலைவர் கலை­ஞர் அவர்­கள் சின்ன சின்னஊர்­க­ளில் கூட கல்­லூரி­ களை உருவாக்­கி­னார். இன்று நாம் தேசிய அள­வை­விட, அவர்­கள் 27% தான் இருக் கிறார்­கள். ஆனால் நாம் உயர் கல்வி விகிதத்­தில் இவ்வளவு முன்­னேறி இருக்­கி­றோம் என்­ றால்... அத்­தனை பேர் இழுத்து வந்திருக்கிற தேர் தான் இது.

இத்­தனை பேர் போராடி இத்­தனை பேர் கஷ்­டப்­பட்டு கல்­வியை அனை­வ­ருக்­கு­மா­னது என்ற நிலையை நாம் தமிழ்­நாட்­டில் உரு­வாக்கி இருக்­கி­றோம். இது நம்­மி­ட­மி­ருந்து தட்டி பறிக்­கப்­ப­டக் கூடாது என்றால் நீங்­கள் இந்த போராட்ட வர­லாற்றை தெரிந்து கொள்ள வேண்­டும்.

ஒரு காலத்­தில் சமஸ்­கி­ரு­தம் தெரிந்­தால் தான் மெடிக்­கல் காலேஜ் குள்­ளேயே போக முடி­யும். சமஸ்­கி­ரு­தம் தெரிந்­த­வர்­கள் மட்­டும்­தான் அதா­வது ஒரு ஜாதியை சேர்ந்­த­வர்­கள் மட்­டும்­தான் மருத்­து­வர்­கள் ஆக முடி­யும் என்ற நிலை இருந்­தது. நீதிக்­கட்சி ஆட்­சி­யிலே தான் அந்த சட்­டம் மாற்­றப்­பட்­டது. அதற்­கு­முன் பெண்­கள் மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் படிக்க முடி­யாத நிலை இருந்­தது. ஆண்­கள் போல பெண்­கள் வேட­மிட்­டுச் சென்று படித்த அவ­லங்­க­ளும் உண்டு.

கல்­விக்­காக இந்த உல­கம் இவ்­வ­ளவு போராடி இருக்­கி­றது. இதையெல்­லாம் நீங்­கள் தெரிந்து கொண்­டால் தான் நாம் பெற்­றி­ருக்­கக் கூடிய இந்த உரி­மை­களை பாது­காத்து வைத்­துக் கொள்ள முடி­யும். ஏனென்­றால் இவ்­வ­ளவு கஷ்­டப்­பட்டு இதை நம் கையில் கொடுத்துவிட்டு சென்­றி­ருக்­கி­றார்­கள்.

இன்று நாம் எல்­லோ­ரும் சர்வ சாதா­ர­ண­மாக கல்­லூ­ரி­க­ளுக்கு சென்று படிக்­கி­றோம் என்­றால் அதற்­குப் பின்­னால் இருக்­கும் போராட்­டங்­கள் என்ன... என்­பதை எல்­லாம் தெரிந்து கொண்­டால் தான் இந்த கால­கட்­டத்­தில் நாம் பெற்­றி­ருக்­கும் உரி­மை­களை பாதுகாக்க முடி­யும்.

நீங்­கள் உங்­கள் பெற்­றோ­ரி­டம் போன் கேட்­டி­ருப்­பீர்­கள். அவர்கள் வாங்கி தர தாம­திப்­பார்­கள். ‘‘அவன் வச்­சி­ருக்­கான் இவன் வச்சிருக்­கான் எனக்கு போன் வாங்கி தா'' என்று சொல்­வீர்­கள். பழைய போன் ஆக இருந்­தால் கூட கொடு என்று சொல்­வீர்­கள். ஒரு கட்டத்­தில் உங்களுக்கு போன் வாங்கி கொடுத்த பிறகு அப்­போ­து­தான் உங்களுக்கு அதன் மதிப்பு தெரி­யும்.

இன்று நாம் கல்­லூ­ரி­யில் உட்­கார்ந்து இருக்­கி­றோம், நாளை நினைத்­தால் சிலிக்­கான் வேலி­யில் போய் வேலை செய்ய முடி­யும் என்ற நிலையை இன்று நாம் அடைந்­தி­ருக்­கி­றோம் என்­றால் அதற்கான வேல்யூ என்ன, மதிப்பு என்ன என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்­டும்.

அதைப் புரிந்து கொள்ள வேண்­டு­மென்­றால் நமக்­காக பல போர்க்­க­ளங்­களை சந்­தித்­த­வர்­கள், ரத்­தம் சிந்­தி­ய­வர்­கள், கண்­ணீர் விட்­ட­வர்­கள் இவர்­க­ளு­டைய வர­லா­று­களைநாம் தெரிந்து கொள்ள வேண்­டும் அது தெரிந்­தால்தான் இதை நம்­மால் பாது­காக்க முடி­யும்.

ஏனென்­றால் நமக்கு இருப்­பது மாபெ­ரும் தமிழ் கனவு. அந்த கனவு எல்­லோ­ரும் சமம், எல்­லோ­ருக்­கும் எல்லா வாய்ப்­பு­க­ளும் இருக்க வேண்­டும். ஆண் -பெண், ஜாதி -மதம் என்ற வித்­தி­யா­சம் இல்­லா­மல் ஒரு அழ­கான உல­கத்தை நாம் உரு­வாக்க வேண்­டும். எல்­லோ­ரும் என்­றும் இங்கே தலை நிமிர்ந்து வாழக்­கூ­டிய சுய­மரியாதை­யோடு வாழக்­கூ­டிய, பெரி­யார் கனவு கண்ட ஒரு வாழ்க்கையை வாழக்­கூ­டிய உரிமை இருக்­கி­றது. அது­தான் நம்முடைய தமிழ் கனவு. அதை உரு­வாக்­கக் கூடி­ய­வர்­கள் நீங்­கள்­தான்.”

- இவ்வாறு கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்கள் உரையாற்றினார்.


No comments:

Post a Comment