பள்ளிகளில் ஆய்வு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 8, 2023

பள்ளிகளில் ஆய்வு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை, செப். 8 - அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக 6.9.2023 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

நம்முடைய பள்ளிகளில் ஆரம்பவகுப்புகளில் ‘எண்ணும் எழுத்தும்’திட்டத்தை முறை யாகச் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியைப் பெறுவதையும், அவர்களின் கற்றல்அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் பலன்களையும் உறுதிசெய்வது அனைவரின் கடமையாகும்.

இந்தத் திட்டத்தை வெற்றிகர மாக செயல்படுத்தும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள பள்ளி களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வு செய்யும்போது, குழந்தைகள் தங்களின் கற்றல் நிலைக்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்துகிறார் களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ‘அரும்பு’, ‘மொட்டு’, ‘மலர்’ ஆகிய ஒவ்வொரு வகுப் புக்கும் ஏற்ற அறிவுறுத்தல்களை அவர்கள் பெறுகிறார்களா என் பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆசிரியரின் கையேடு மற்றும் செயல்முறைப் புத்தகங்களில் தெளிவாகக் கோடிட்டுக் காட் டப்பட்டுள்ள கற்றல் விளைவு கள் எட்டப்படுகின்றனவா என் பதை சரிபார்க்க வேண்டும். கற்றல்விளைவுகளுடன் எல்லா நடவடிக்கைகளும் ஒத்துப் போகின்றனவா என்பதை உறு திப்படுத்த வேண்டும்.

ஆசிரியர்களின் கையேடு மற்றும் செயல்முறைப் புத்தகங் களில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லாவற்றிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் ஈடுபடுவதை உறுதிப்படுத்த வேண்டும். வகுப் பறைச் சூழலில் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் மன அழுத்த மின்றியும் இருக்கிறார்களா என் பதைக் கவனிக்க வேண்டும்.

படைப்பாற்றலையும் திறமை யையும் ஊக்குவிக்கும் விதமாக, ’கதைப் பகுதி’, ‘பாடல் பகுதி’, ‘செயல்பாடுகள் பகுதி’, ‘கலை மற்றும் கைவினைப் பகுதி’ ,‘வாசிப்புப் பகுதி’ உருவாக்கப் பட்டிருக்கின்றனவா என்றும், அவையெல்லாம் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்றும் சரிபார்க்க வேண்டும். கற்பித்தல் முறைகளில் இத்த கைய முன்னுதாரண மாற்றத்தை வழிநடத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், வழிகாட்டவும் உதவ வேண்டுமே தவிர, நீங்கள் பார்வையிடச் செல்வது அச் சுறுத்துவதாக இருக்கக்கூடாது.

காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தை மதிப்பிடவும். கழிப்பறைகள், தண்ணீர் உள் ளிட்ட அடிப்படை வசதிகளை யும் உறுதிசெய்ய வேண்டும். தேசிய சுகாதார இயக்கம் மற் றும் பொது சுகாதார அமைப் புடன் ஒருங்கிணைந்து பள்ளி சுகாதாரத் திட்டத்தைத் திறம் படச் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்துக் குழந்தைகளின் சுகாதாரப் பரி சோதனையும் கைப்பேசி செயலி மூலம் ஆசிரியர்களால் நடத்தப் படுவதை உறுதிசெய்ய வேண் டும்.

பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மேற்பார்வை அலுவ லர்களும் முதன்மைக் கல்வி அலுவலர் முதல் வட்டாரக் கல்வி அலுவலர் வரை, பள்ளி களைத் தவறாமல் ஆய்வுசெய்வ தையும், வகுப்பறைகளைக் கண் காணிப்பதையும் பள்ளிப் பார்வை செயலி மூலம் உறுதி செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment