குனியமுத்தூரில் "தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்" தெருமுனை பிரச்சாரக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

குனியமுத்தூரில் "தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்" தெருமுனை பிரச்சாரக் கூட்டம்


குனியமுத்தூர், செப். 5- கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவு நாளை முன்னிட்டு தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் தெருமுனை பிரச்சாரக் கூட் டம் 1.9.2023 அன்று மாலை 7 மணியளவில் குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்றது. 

ப.க. மாவட்ட தலைவர் வழக்குரைஞர் பெ.சின்னச்சாமி தலைமை தாங்கினார். ப.க. மாவட்ட செயலாளர் அக்ரி நாகராஜ் வரவேற்புரையாற்றி னார். ப.க. மாநில துணைத் தலைவர் தரும.வீரமணி,  மாவட்ட தலைவர் ம.சந்திர சேகர், தி.க.செந்தில் நாதன் - மாநகர தலைவர், தா.சூசை ராஜ் -  ப.க. மாநகர தலைவர், மா. ஆடிட்டர் ஆனந்தராஜ்- மாவட்ட துணைச் செயலாளர் ப.க., மு.தமிழ்செல்வம் - மாவட்ட துணைத் தலைவர், பழ.அன் பரசு - பொதுக்குழு உறுப்பினர், சி.கலைச்செல்வி - மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். 

கோவை மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச் செல்வன், பேராசிரியர் மு.தவமணி, சி.லோகநாதன் குனி யமுத்தூர் பகுதி கழக செய லாளர் தி.மு.க,, மு.அல்லா பிச்சை மாவட்ட பிரதிநிதி தி.மு.க, முகமது யாகூப் வட்ட செயலாளர் தி.மு.க. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்பித்தனர். 

மாவட்ட செயலாளர் புலி யகுளம் க.வீரமணி, மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் ஆகியோர் துவக்க உரை யாற்றினர். கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப் புரையாற்றினார். தொ.அ. மாவட்ட செயலாளர் இரா. வெங்கடாசலம், மாவட்ட துணைச் செயலாளர் காளி முத்து, சுந்தராபுரம் பகுதி கழகத் தலைவர் தெ. கும ரேசன், குனியமுத்தூர் பகுதி கழக செயலாளர் பா. ஜெயக் குமார், பீளமேடு பகுதி கழக தலைவர் முருகானந்தம், பீள மேடு பகுதி கழக செயலாளர் ரமேஷ், தொண்டாமுத்தூர் பகுதி கழக செயலாளர் வி. எம்.சி.ராஜசேகர், புலியகுளம் பகுதி கழக செயலாளர் கிருஷ் ணன், மதுக்கரை ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் ரா.சி.பிரபாகரன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் கா.கவுதம், நியூட்டன், தமிழ் முரசு, யாழினி, குனியமுத்தூர் துரை.வேலுமணி இருதய ராஜ், முத்து கணேஷ், கந்த சாமி, குரு,ஆவின் சுப்பையா, கோபாலகிருஷ்ணன், ஆனந்த் குமார் ,மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர் இறுதியாக மாவட்ட ப.க துணை தலை வர் எட்டிமடை நா.மருத முத்து நன்றி கூறினார்.

No comments:

Post a Comment