திருவள்ளுவரையும், அம்பேத்கரையும் ஜாதி பெயரைக் கூறி அவமதிப்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில மேனாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 15, 2023

திருவள்ளுவரையும், அம்பேத்கரையும் ஜாதி பெயரைக் கூறி அவமதிப்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில மேனாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் உரை

 இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு உங்களுக்கெல்லாம் ஹிந்து என்று பெயர் வைத்திருக்கிறோம். பிராமணனை ஹிந்து என்று சொல்ல வைப்பதற்கே நமக்கு ரொம்ப காலம் ஆச்சு!

இந்த நாடு ஹிந்து நாடாக இருக்கணும்னா, பி.ஜே.பி.யைத் தவிர, மோடியைத் தவிர வேறு யாரும் காப்பாத்த முடியாது!

சென்னை, செப்.15 ‘‘இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு உங்களுக்கெல்லாம் ஹிந்து என்று பெயர் வைத் திருக்கிறோம். பிராமணனை ஹிந்து என்று சொல்ல வைப்பதற்கே நமக்கு ரொம்பக் காலம் ஆச்சு. இந்த நாடு ஹிந்து நாடாக இருக்கணும்னா, பி.ஜே.பி.யைத் தவிர, மோடியைத் தவிர வேறு யாரும் காப்பாத்த முடியாது'' என்றார் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில மேனாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன்.

கடந்த 11.9.2023 அன்று தியாகராயர் நகரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடந்த ஆன்மிக நிகழ்வில்  பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் அவதூறாகப் பேசிய விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில மேனாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் உரை வருமாறு:

‘‘எல்லா பயல்களும் மூளையை அடகு வைத்து விட்டான்கள்; எவன் கையிலோ ஓட்டு இருக்கு  - அந்த ஓட்டிற்காக - அம்பேத்கருக்கும், உன் ஜாதிக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லித் தொலைத்தால்கூட  அவனை அன்றிலிருந்து விட்டுடுவானுங்க.

திருமாவளவன் பறையர்? 

அம்பேத்கர் சக்கிலியர்

ஏனென்றால், அம்பேத்கர் இவன் ஜாதி இல்லை. திருமாவளவன் ஜாதியா? திருமாவளவன் பறையர்? அம்பேத்கர் சக்கிலியர்.

அம்பேத்கர் எப்படிடா உன் ஜாதியாக இருக்க முடியும்?

இந்த ஊர்ல இருக்கிற பறையர் யாராவது சக்கிலியரில் மணம் முடிப்பானா? கல்யாணம் பண்ணிப்பானா?

பறையர் யாராவது, பள்ளரை கல்யாணம் பண் ணிப்பானா?

எவனுக்குமே ஒண்ணும் கிடையாதுடா! நீங்க ளெல்லாம் அடிச்சுக்கிட்டு நிக்கிறவனுங்க - அடிச்சுத் தின்கிறவனுங்க.

அந்த அம்பேத்கர்தான் இந்த கான்ஸ்டிடியூசனையே கொண்டு வந்து கொடுத்தார் என்று சொல்லி பல பேர் எழுதிட்டு இருக்கானுங்க - பேசிட்டு இருக்கானுங்க - இப்ப இருக்கிற ஆட்சிக்காரனும் அதையே சொல்லிட்டு இருக்கான்; துதி பாடிட்டு இருக்கான்.

இதை யாரு உருவாக்கினது - சேர்மன் பேரைத்தான் போடவேண்டும் என்றால், ராஜேந்திர பிரசாத் பெயரை போடவேண்டும்.

டைப் அடித்ததைப் புரூப் பார்த்தவன்தான் 

அம்பேத்கர்

அங்கே கிளார்க்கா வேலை பார்த்தவன், டிராப்ட் எழுதினவன், டைப் அடித்தவன், டைப் அடித்ததைப் புரூப் பார்த்தவன்தான் அம்பேத்கர்.

அம்பேத்கருடைய கிளாஸ் அதில் எதுவுமே கிடையாது என்பது தெரியுமா உங்களுக்கு? அவர் தன்னுடைய மூளையிலிருந்து இதை நான் எழுதுறேன்னு சொல்லி எழுதினதே கிடையாது.

எல்லோரும் பேசிடுவானுங்க - அதாவது டிஸ்கஷன் வில் பி தேர் - எல்லாவற்றையும் ஒரு ஸ்டேனோகிராபர் எழுதுவான். அந்த ஸ்டேனோகிராபர் டைப் அடிப்பான்; டைப் அடித்ததை கரெக்ட்டா அடித்திருக்கிறானா என்பதை வெரிபை பண்ணவேண்டும் - அந்த வேலையைத்தான் அம்பேத்கர் செய்தார்.

திருவள்ளுவர் என்ற ஒரு ஆளே கிடையாது; அவர் திருக்குறளை எழுதினார் என்பது அதைவிடக் கற்பனை!

திருவள்ளுவர் என்ற ஒரு ஆளே கிடையாது. அந்த ஆள் ஒருவர் இருந்தார் என்பதே கற்பனை. அவர்தான் எழுதினார் திருக்குறள் என்பது அதைவிடக் கற்பனை.

இதெல்லாம் சத்தியம் என்று சொல்லிட்டு இருக் கேல்லே, அப்ப ராமாயணத்தை எப்படி நீ பொய்ன்னு சொல்ல முடியும்? இதைவிட ஆதன்டிக்கா என்ன நட்சத் திரத்தில் பொறந்தார் ராமர் என்பது எனக்குத் தெரியும்டா? ராமர் பொறந்த நாளை ஊர்தோறும் நாங்கள் கொண் டாடுறோம்டா - ராமநவமி என்று - கிருஷ்ணாஷ்டமி என்று.

திருவள்ளுவருடைய அப்பா, அம்மா 

யாருன்னு தெரியுமாடா?

நீ வள்ளுவர் என்னைக்குப் பொறந்தார்னு சொல் லுவியா? உன்னால் சொல்ல முடியுமா? சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறதா? அப்பா, அம்மா யாருன்னு தெரியுமாடா?

தசரதனுக்குப் பொறந்தவன் ராமன்னு நான் சொல்லுவேன். திருவள்ளுவர் யாருக்குப் பொறந்தார். தைரியமிருந்தா வந்து சொல்லு.

ஒருத்தன் ஆதி பகவன் என்கிறான். ஆதி யாருடா? பகவன் யாருடா? இவன்லாம் வாழ்ந்ததற்கு ஏதாவது அடையாளம் இருக்கிறதா?

1967 ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்தவர்கள் எல்லோரும் பாவிகள்!

67-க்குப் பின்னால் தமிழ்நாட்டில் பிறந்தவன் எல்லோரும் பாவிகள்; மகாபாவிகள்!

67-இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருது. அதற்கப்பறம் எவன்லாம் பொறந்தானோ அவன் எல்லாம் பாவிதான்டா.

அதிலே நல்லவன்னு எப்படி இருக்க முடியும்?

அதற்கு முன்னாடி இருந்த தமிழ்த் தெரிந்த எல்லா வித்வான்களுக்கும், சமஸ்கிருதம் தெரியலேன்னு தமிழ் வித்வான்னு பட்டம் கொடுக்கமாட்டோம்; அதுதான் தமிழ்நாட்டின் நிலைமை.

வீரசவர்க்கார் அந்தமான் சிறையில் இருந்ததுபோல நீ போய் இருப்பியா?

வீரசவர்க்கார் எந்த அளவிற்கு ஜெயில்ல இருந் தாரோ, அன்னிக்கு ஒரு நாள் காந்தி இருந்திருக்காராடா?

அன்னிக்கு ஒருத்தன் போட்டுருக்கான் - காந்திஜி ஜெயில்ல இருக்கும்போது அவருக்கு செலவு பண் ணினதுக்கு டிராப்டு பிரிட்டிஷ் கவர்ன்மெண்ட் கொடுத்திருக்கு - பணம். எதுக்கு? டெய்லி காலம்பற டீயிலிருந்து சாயங்காலம் வரைக்கும்.

அந்த மாதிரி சிறை எவன் வேண்டுமானாலும் போலான்டா!

ஆனால், வீரசவர்க்கார் போய் இருந்தாரே ஒரு சிறை, அந்தமான் சிறை - அதிலே நீ போய் இருப்பியா?

இப்ப ஆர்.எஸ்.எஸ்.காரன்கூட. ஸநாதனம் தர்மம் என்கிறான். அடே, ஸநாதன தர்மத்திற்கும், உனக்கும் என்னடா சம்பந்தம்? நீ ஏண்டா, அதை ஸநாதன தர்மம் என்கிற. எவனோ ஒரு பயித்தியக்காரன் ஏதோ ஒரு மேடையில் ஸநாதனத்தை ஒழிப்போம் என்று அப்படி சொன்னான் என்றால், உடனே நீயும் ஸநாதன தர்மம் அப்படின்னு சொல்லுவியா? வலுக்கட்டாயமா, நானும் ஸநாதனிதான் சொல்லுவியா!

இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு உங்களுக்கெல்லாம் இந்து என்று 

பெயர் வைத்திருக்கிறோம்!

ஹிந்து என்று சொல்றதுக்குத்தான்டா,  இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு உங்களுக்கெல்லாம் ஹிந்து என்று பெயர் வைத்திருக்கிறோம்.

எந்தப் பிராமணனும் தன்னை ஹிந்து என்று சொல்லிக்கமாட்டான், 80 வருஷத்திற்கு முன்னாடி என்பதை மறந்திடுங்க.

நான் பல கிராமங்களுக்குப் போயிருக்கேன். அந்தக் கிராமத்திலே அக்கிரகாரத்தைப் பார்த்துட்டு, இங்கெல்லாம் பிராமணர்கள் இருக்கிறார்கள் என்பான்; இங்கெல்லாம் துலுக்கன்கள் இருக்கிறார்கள் என்பான்; இந்தத் தெருவுல காலனி ஆட்கள் இருக்காங்க என்பான். அவனுக்குப் பெயர்கூட கிடையாது. காலனி ஆட்கள். 

எந்தக் காலனியில், எவன் ஒட்டிட்டு வந்தான் என்று எனக்குத் தெரியாது.

காலனி ஆள் என்றால் என்ன தெரியுமா?

நம்மூரில் ஷெட்யூல்டு காஸ்ட் என்று சொல்றோமே, அவனுகளைதான் இவனுக காலனி ஆட்கள் என்கிறான்.

அதற்கப்புறம், நீங்கள் யார் என்றால், இரண்டு டெபினிசியன்தான்.

மறுத்த ஒரே ஒரு கும்பல், பிராமணன்தான்

நாங்கள் எல்லாம் தமிழர்கள் - ஹிந்துக்கள் என்பான்.

நன்னா கவனியுங்க, தமிழன் என்று சொல்பவர்கள் யாரும், தன்னை ஹிந்து என்று சொல்லிக் கொள்வதற்கு மறுக்கவில்லை. மறுத்த ஒரே ஒரு கும்பல், பிராமணன் தான்.

பிராமணனை ஹிந்து என்று சொல்ல வைப்பதற்கே நமக்கு ரொம்ப காலம் ஆச்சு!

அந்த பிராமணனை ஹிந்து என்று சொல்ல வைப்பதற்கே நமக்கு ரொம்ப காலம் ஆச்சு. அவன் எல்லாத்துலயும் வேத தர்மம், வைதிகம் தர்மத்தை நாங்கள் பின்பற்றுவது என்பான். ஸநாதன தர்மம் என்றான். இதிலே ஒன்றும் தெரியாவிட்டாலும், இதைத்தான் சொல்லிட்டு இருந்தான்.

ஹிந்து என்று சொன்னால், மற்றவர்களைத்தான் ஹிந்து என்று சொன்னான், நாங்கள் ஹிந்து இல்லை என்றான்.

அப்புறம், இன்னொரு ஆத்தண்டிக் இல்லாத ஒரு ஆள் பெயரைச் சொல்லி, அவர்தான் எங்கள் காட் என்றான்.

கிரைஸ்ட் - கிரைஸ்ட் அஸ் நெவர் டோல்ட், கிரைஸ்ட் இஸ் காட்.

அவரே தேவகுமாரன் ஆரம்பத்தில சொல்லிட்டு இருந்தானுங்க. அதுமட்டுமல்லாமல், பரமண்டலத்தில் இருக்கின்ற பிதா என்று எவனோ ஒருத்தனை ஆம்பளைத்தான் வைச்சுக்கணும், அது பொம்பளயா இருக்க முடியாது என்று அவனே முடிவிற்கு வந்து சொல்லிட்டு இருந்தான்.

அதெல்லாம் தப்பு  - இதை நிறைய இடத்திலே சொல்லிருக்கே.

கிறிஸ்தவன் நடத்துற ஸ்கூலுக்கு 

நம்ம பிள்ளைகளை அனுப்பக்கூடாது 

கிறிஸ்தவ ஸ்கூலுக்கு அனுப்பாதே என்ற சொல் லிருக்கே.

விவேகானந்தரும் சொன்னார்; பாரதியாரும் சொன்னார்.

கிறிஸ்தவன் நடத்துற ஸ்கூலுக்கு நம்ம பிள்ளைகளை அனுப்பக்கூடாது. நாம எதற்காக அங்கெல்லாம் படிக்கணும்? பெண்கள் கல்வி, கல்வி என்றுதான் முட்டிக்கொள்ளவேண்டும் என்று பாரதியார் சொல்றார்.

இவர்கள் கிறிஸ்துவைப்பற்றி தெரிந்துகொள்வதற்காக அல்ல - வியாசரைப்பற்றி தெரிஞ்சுக்கணும்; காளி தாசனைப்பற்றி தெரிஞ்சுக்கணும், நம்ம தெய்வங் களைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற் காகத்தான்.

இந்த கிறிஸ்தவ மிஷனரிகளை இரண்டு பேரும் சாடியிருக்கிறார்கள்.

கிறிஸ்தவ மிஷனரிகளை பாரதியார் நிறைய இடத்தில் திட்டியிருக்கிறார். கன்னாபின்னான்னு திட்டி யிருக்கிறார்.

நீ ஒரு தேச பக்தனா? என்று கேட்கிறார், விவேகானந்தர்

விவேகானந்தர் அப்படி திட்டியிருக்கிறார்.

தேச பக்தி அப்படிங்கறது ஒன்னு. தேச பக்தின்னு சொல்லும்பொழுது, நீங்கள் பாத்தேள்னாக்கா, அந்த தேச பக்தி என்பதே, தன்னுடைய மதத்தை எவன் இழிவுபடுத்துறானோ, பொறுத்துக்கிட்டிருக்கியே, நீ ஒரு தேச பக்தனா? என்று கேட்கிறார், விவேகானந்தர்.

நீ மதத்தைப்பற்றி பேசக்கூடாது அப்பதான் தேசபக்தன் என்று சொல்லவில்லை.

மதத்தைப்பற்றி உன்னுடைய மதம், உன்னுடைய பண்பாட்டைப்பற்றி ஒருவன் திட்றான்; என்னுடைய அப்பா - அம்மாவை ஒருத்தன் திட்றான்; எங்க தாத்தா - பாட்டியை ஒருத்தன் திட்றான் - அதை எவன் ரசிக்கிறானோ, அவன் அயோக்கியனாகத்தானே இருக்கணும்.

வரும் தேர்தலில் பி.ஜே.பி.யினுடைய கூட்டணி, பி.ஜே.பி. மட்டும்தான் வெல்லணும்!

வரக்கூடிய தேர்தல்ல பி.ஜே.பி.யினுடைய கூட்டணி, பி.ஜே.பி. மட்டும்தான் வெல்லணும். அதற்கு ஓட்டுப் போடவேண்டியது உன் கடமை. நீ அரசியலில் இருக்க லாம், இல்லாமல் போகலாம். ஆனால், ஓட்டுன்னு ஒன்னு உனக்கு இருக்கே, அதை எவனுக்காவது போட்டுத் தொலைத்துத்தானடா ஆகணும்?

தி.மு.க.விற்கு ஓட்டுப் போட்டால் 

தேசத் துரோகம்!

அப்படி போடுகிறவர்கள் யாருக்குப் போடவேண்டும். வேறு யாருக்குடா போட முடியும்? நீ வேற யாருக்குப் போடுவே - தி.மு.க.விற்குப் போட்டால் தேசத் துரோகம் - பா.ம.க.விற்குப் போட்டால்  தேசத் துரோகம், எல் லோருமே தேசத் துரோக கட்சிகள்டா - எல்லோருமே அன்னியன்கள்.

இந்த நாடு ஹிந்து நாடாக இருக்கணும்னா, பி.ஜே.பி.யைத் தவிர, மோடியை தவிர வேறு யாரும் காப்பாத்த முடியாது

நம்மூர்ல பேசுற ஒரே ஒரு கட்சி பா.ஜ.க.தான். ஆனா, ஒன்னே ஒன்னு விஷயத்தைப் புரிஞ்சுக்குங்கோ, எனக்குப் புடிக்கலே, எகனாமிக்ஸ் பாலிடிக்ஸ் புடிக்கலே, மோடி செய்ற இது பிடிக்கல, அது பிடிக்கல என்று யோசிச்சுப் பார்க்கிறதுக்கான டைம் இதுல்ல. இன்னிக்கு ஒன்னே ஒன்னுதான், இந்த நாடு ஹிந்து நாடாக இருக்கணும்னா, பி.ஜே.பி.யைத் தவிர, மோடியை தவிர வேறு யாரும் காப்பாத்த முடியாது.

- இவ்வாறு  விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில மேனாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசினார்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்!

இவ்வளவு தரக்குறைவாக ஒரு நபர் பொது மேடையில் பேசிடுவது அரசியல் பண்பா? கண்ணியமா? இவர்மீது சட்டம் பாய்ந்தது இங்கே. வட மாநிலங்களில் இதைவிட தலையை வெட்டுவேன், நாக்கை அறுப்பேன், கண்ணைத் தோண்டுவேன் என்று ஒன்றிய அமைச்சரே பேசுவது - அங்கே ஊக்கமூட்டப்படுகிறது. அம்பேத்கரை இப்படி பொய் அர்ச்சனை செய்து, கீழிறிக்கம் செய்துள்ள பார்ப்பனியம் எப்படிப்பட்டது? ஆரிய ஆணவம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொண்டு செயல்படவேண்டும்!

வாசகர்கள் அறியவே அதை அப்படியே இங்கே வெளியிடுகிறோம், மன்னிக்கவேண்டும்!


No comments:

Post a Comment