பன்குரா, செப். 14 - மேற்கு வங்காளத்தின் பன்குரா நகரில் மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் தொண்டர்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தி யுள்ளார்.
அப்போது, பா.ஜ.க. தொண்டர் களில் சிலர் கும்பலாக சேர்ந்து ஒன்றிய அமைச்சரை கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து பூட்டினர்.
முழக்கங்களையும் எழுப்பியபடி இருந்தனர்.
இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்களில் ஒருவரான மொகித் என்பவர் கூறும்போது, கட்சித் தொண்டர் களுக்கு சர்க்கார் முக்கியத்துவம் அளிப்பதில்லை.
சர்வாதிகாரி போல் செயல்படு கிறார். அவருக்கு நெருங்கிய நபர் களை மாவட்ட கமிட்டியின் உறுப்பினர்களாக ஆக்குகின்றனர். கட்சியை காப்பாற்றவே நாங்கள் போராடி வருகிறோம்.
அவராலேயே, இந்த முறை பன்குரா நகராட்சியில் கட்சிக்கு எந்த சீட்டும் கிடைக்கவில்லை. முந்தின தேர்தலில் 2 வார்டுகளை பா.ஜ.க. கைப்பற்றி இருந்தது.
பஞ்சாயத்துகளுக்கு பல இடங் களில் அவர்களால் வேட்பா ளர்களை கூட நிறுத்த முடிய வில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment