புதுடில்லி, செப். 22 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி சமீப நாட்களாக பொது இடங்களுக்குச் சென்று, ஓட்டுநர், விவசாயிகள், தொழிலாளர்கள் போன்றோரை சந்தித்து அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி கேட்டறிந்து வருகிறார்.
இந்தநிலையில், டில்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி திடீரென சென்றார். அப்போது ரயில் நிலையத்தில் பணிபுரியும் (போர்ட்டர்கள்) சுமை தூக்கும் தொழிலாளிகளை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். மேலும் சுமை தூக்கும் தொழிலாளிகளின் குறைகள், குடும்பச் சூழ்நிலை குறித்து ராகுல் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளி உடை அணிந்து, பயணிகளின் உடைமைகளை ராகுல் காந்தி சிறிது தூரம் தூக்கிச் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment