தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை அறிக்கை
கிணத்துக்கடவில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பதா? குற்றவாளிகளுக்குக் கடும் தண் டனை தேவை என்றும், தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
பொள்ளாச்சி கிணத்துக்கடவு வட சித்தூரில் உள்ள தந்தை பெரியார் சிலையை சில காவிக் காலிகள் அசிங் கப்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம். கடுமையான கண்டனத்தைத் தெரிவித் துக் கொள்கிறோம்.
விஷமிகளை - குற்றவாளிகளை உடனடியாகப் பிடித்து கடுமையாக தண்டிக்கும் வண்ணம் உரிய சட்டப் பிரிவுகளைக் கொண்டு, சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளக் கேட்டுக்கொள்கிறோம்.
தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திட இப்படிப்பட்ட கேவலமான நடவடிக்கையில் பா.ஜ.க.வினர் ஈடுபடுகிறார்கள்.
இதற்குரிய ‘‘விலையை'' வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வட்டியும் முதலுமாகத் தரத் தயாராகி வருகிறார்கள் என்பதை மறக்கவேண்டாம்.
தந்தை பெரியார் ஒரு கட்சிக்குச் சொந்தமானவர் என்று மனப்பால் குடிக்கவேண்டாம். மண்ணை மணந்த மணாளர் அவர். ஒட்டுமொத்த தமிழின மக்களே ஓரணியில் நின்று உரிய வகையில் தேர்தலில் பாடம் கற்பிப்பார்கள் என்பது கல்லின்மேல் எழுத்து.
20.9.2023
No comments:
Post a Comment