இதுதான் ஸனாதனம் என்பது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 10, 2023

இதுதான் ஸனாதனம் என்பது!

கோவில் கட்டிய மகாராணியையே வெளியே தள்ளிய கொடுமை!
காரணம், மகாராணி விதவையாம்!

போபால், செப்.10 கோவில் கட்டிய மகா ராணியையே வெளியே தள்ளிய கொடுமை மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. காரணம், மகாராணி விதவையாம் - இதுதான் ஸனாதனம்!

விவரம் வருமாறு:

பன்னா மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டம். முன்பு குவாலியர், மேவாட், இந்தூர், சித்தோட் போன்ற சமஸ்தானங்களில் ஒன்றாக இருந்தது

இந்த சமஸ்தான பட்டத்து மகாராணி ரித்தேஷ்வரி ராஜே.  இவர் தற்போதைய ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவரும், மேனாள் முதலமைச்சருமான வசுந்தரா ராஜேவின் நெருங்கிய உறவினரும் கூட 

பன்னா மத்தியப் பிரதேசத்தின் ‘‘கோவில் களின் நகரம்'' என்று அழைக்கப்படுகிறது, பன்னா சமஸ்தான மன்னர்கள் பலநூறு கோடிகள் ஒவ்வொரு கோவில்களுக்கும் வைப்பு நிதியாகத் தந்து அதில் வரும் வட்டியில் தான் கோவில் நிர்வாகம் நடக்கிறது,

பட்டத்து மகாராணிக்கே அவமானம்!

நடந்து முடிந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று தற்போதைய பட்டத்து மகாராணியும், ஜோதி ராதித்ய சிந்தியாவின் அத்தையுமான ரித் தேஷ்வரி ராஜே தாங்கள் கட்டிய பத்மாவதி கோவில் பிரகாரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலின் விழாவில் கலந்துகொண்டு ஆரத்தி எடுக்க முயல, கைம்பெண்ணான அவரை ஆரத்தித் தட்டை தொடவிடாமலும், கோவிலுக்குள் நுழையவிடாமலும் அடித்து வெளியே தள்ளியுள்ளனர்.

இந்நிகழ்வின் போது பட்டத்து இளவரசரான பைரவ்சிங் ராஜேவும் அங்கே நின்றுகொண்டு இருந்தார். ஆனாலும், அவரால் தனது தாயாரை எழுப்பி விட முடிந்ததே தவிர, தள்ளி விட்ட பார்ப்பனர்களை ஒன்றும் கேள்வி கேட்க முடியவில்லை. 

இக்கோவிலில் மகாராணிகள் ஆரத்தி எடுப்பது வழக்கம், ஆகையால்தான் கடந்த ஆண்டைப்போல் பன்னா மகாராணி ஆரத்தி எடுக்க முயன்றார். அவர்களது முன்னோர்கள் கட்டிய கோவில், அவர்களது நிதியில் இன்றும் இயங்குகிறது, ஆனால், கணவனை இழந்தவர் என்பதால் அடித்து விரட்டுகிறார்கள்.    

இன்றும் ஸனாதனம் இவ்வளவு கொடூர முகம் காட்டுகிறது, ஆனால், கட்டுக்கதைகளை அப்படியே நம்பிக்கொண்டு ஸனாதன அடிமைகளாக மக்கள் இருப்பதையும் காண முடிகின்றது.

மகாராணி மீதே வழக்காம்!

இந்த நிலையில் கோவில் நிர்வாகம்- பன்னா மகாராணி மீது ‘‘ஹிந்துக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் நடந்துகொண்டார். மேலும் கோவில் ஊழியர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்த முயன்றார்'' என்று பார்ப் பனர்கள் கொடுத்துள்ள புகாரின்படி பாதிக் கப்பட்ட மகாராணி மீதே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


No comments:

Post a Comment