தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக 'நீட்' தேர்வு மதிப்பெண் பூஜ்ஜியமாக இருக்கலாமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 22, 2023

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக 'நீட்' தேர்வு மதிப்பெண் பூஜ்ஜியமாக இருக்கலாமாம்!

சென்னை செப்.22  தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக முதுநிலை மருத்துவ படிப்பு களுக்கான 'நீட்' தேர்வு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. 

நாடுமுழுவதும் எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் ஆகிய மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான இடங்களில், 2023-_2024 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக் கான நீட் தேர்வு கடந்த மார்ச் 5-இல் நடந்தது. முடிவுகள் மார்ச் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 800 மதிப் பெண்களுக்கு நடைபெற்ற நீட் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் ணாக பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவ டைந்த பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) 291 மதிப் பெண்ணும், பொதுப் பிரிவினரில் மாற்றுத் திறனாளிகளுக்கு 274 மதிப்பெண்ணும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளிகள் உட்பட) 257 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒன்றிய அரசு இடங்களுக்கு  https://mcc.nic.in/  என்ற இணையதளத்தில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. 3 சுற்று கலந்தாய்வு நிறைவடைந் துள்ளது. மூன்றாம் சுற்று முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இரண்டு சுற்று நிறைவு: தமிழ்நாட்டில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக அரசு மருத்துவக் கல் லூரிகளில் மீதமுள்ள 50சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக் கான இடங்கள் மற்றும்நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத் தும் மாநில கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கியது. இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள் ளது. இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை நிரப்புவ தற்காக நீட் தகுதி மதிப் பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.இது தொடர் பாக தமிழ்நாடு மருத்துவ அலு வலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.அகிலன் கூறிய தாவது:

அகில இந்திய அளவில் நடந்த மூன்று சுற்று, தமிழ் நாட்டில் நடந்த இரண்டு சுற்று கலந்தாய்வில் பெரும் பாலான அரசு இடங்கள் நிரம்பி விட்டன. தனியார் கல்லூரி களில் இடங்கள் நிரம்பவில்லை.

மாநில அரசுக்கு அனுமதி: தற்போது நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியம் என்று அறிவித்துள்ளதால் தனியாரில் காலியாகவுள்ள அனைத்து இடங்களையும் நிரப்பலாம். இதற்கு ஏன் நீட் தேர்வு நடத்த வேண்டும். இதைவிட தமிழ்நாடு அரசு ஏற்கெனவே முதுநிலை மருத் துவப் படிப்புகளுக்கு நடத்திய தேர்வு சிறந்த ஒன்றாக இருந் தது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு வேண்டுமென் றால் ஒன்றிய அரசு நீட் தேர்வு நடத்திக்கொள்ளட்டும். தமிழ் நாடு இடங்களுக்கு மாநில அரசே தேர்வு நடத்த ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment