கோயில் திருவிழாவின் யோக்கியதை அடிதடி - கொலையில் முடிந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 12, 2023

கோயில் திருவிழாவின் யோக்கியதை அடிதடி - கொலையில் முடிந்தது

சென்னை, செப்.12 சென்னை மயிலாப்பூர் விசாலாட்சிதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெயின்டர் தினேஷ் (32). இவர், மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் அருகே உள்ள துலுக்கானத்தம்மன் கோயில் திருவிழா சாமி ஊர்வலத்தில் மது போதை யில் ஆடியபடி சென்றார். அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெயின்டர் பார்த்திபனும் (28) குடி போதையில் ஆட்டம் போட்டார்.

அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பார்த்திபன் தாக்கியதில் தினேஷ் கீழே சரிந்து விழுந்தார். சுய நினைவின்றி கிடந்த தினேஷை அவரது நண்பர் பாலாஜி 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தினேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற் கெனவே இறந்துவிட்ட தாகத் தெரிவித்தனர். 

இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.


No comments:

Post a Comment