ஸனாதனம் என்றால் என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 11, 2023

ஸனாதனம் என்றால் என்ன?

இந்து மதம் ஏழு பிரிவுகளை கொண்டுள்ளது.

 1.  சைவம்: 

சைவம் என்றால் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது.

2. வைணவம்: 

வைணவம் என்றால் பெருமாளை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவது.

 3. சாக்தம் : 

சாக்தம் என்றால் சக்தியை முழு முதற் கடவுளாக கொண்டு வழிபடுவது.

4. காணபத்தியம்:

காணபத்தியம் என்றால் பிள்ளை யாரை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவது.

 5. சவுரம்: 

சவுரம் என்றால் பிரம்மாவை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவது. 

6. கவுமாரம்: 

கவுமாரம் என்றால் முருகனை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவது.

 மேலே உள்ள இந்த ஆறு வழிபாட்டு முறைகளை அறுவகை சமயங்கள் என்று இந்துக்கள் கூறுவார்கள்.

ஏழாவதாக பிற்காலத்தில் ஆரியர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட வழிபாட்டு முறை தான் சனாதனம்.

ஸனாதனம் என்றால் பிராமணர்களை கடவுளாக ஏற்றுக் கொண்டு பிராமணர்களுக்கு சேவை செய்து அவர்களுக்கு அடிமையாக வாழும் வாழ்க்கை தான் ஸனாதானம். இன்னும் தெளிவாக கூற வேண்டு மென்றால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. என்பது பிராமணர்களின் கட்சியாகும். அந்தக் கட்சிக்கு அடிமையாக அடங்கி செயல்படுவது தான் ஸனாதனம்.

No comments:

Post a Comment