மருத்துவப் படிப்புக்கு அதிக இடங்கள் உள்ள தமிழ்நாட்டில் இந்த இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மாணவ - மாணவிகளுக்கு கிடைக்க வேண்டும் அமைச்சர் முத்துசாமி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 11, 2023

மருத்துவப் படிப்புக்கு அதிக இடங்கள் உள்ள தமிழ்நாட்டில் இந்த இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மாணவ - மாணவிகளுக்கு கிடைக்க வேண்டும் அமைச்சர் முத்துசாமி

ஈரோடு, செப். 11- தமிழ்நாடு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் நமது மாணவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோடு-பெருந்துறை மெயின் ரோட்டில் நந்தா மருத்துவக் கல்லூரி கட்டடத் திறப்பு விழா மற்றும் முதலாம் ஆண்டு வகுப்பு கள் தொடக்க விழா நடந்தது. விழாவில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு -ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மருத்துவமனைகள் ஒரு சமூகத் துக்கு மிகவும் பயனுள்ளவை. கடந்த கரோனா பேரிடர் காலத் தில் மருத்துவமனைகளின் அத்தி யாவசிய தேவை குறித்து நாம் உணர்ந்து கொண்டோம். 

கரோனாவின் முதல் அலையின் போது தி.மு.க. ஆட்சியில் இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந் தோம். அப்போதும் தினமும் 24 மணி நேரமும் யாராவது அலை பேசியில் மருத்துவ உதவி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். 

மருத்துவமனை இல்லை, ஆக் சிஜன் இல்லை என்று கண்ணீரோடு கோரிக்கை வைப்பார்கள். நாங்கள் முயற்சி செய்து ஒரு படுக்கையை கண்டுபிடிக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிடும். படுக்கை தயார் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைக்கும்போது எதிர்முனையில் அவர் இறந்து விட்டார் என்ற பதில் வரும்.

இப்படிப்பட்ட வேதனையான அனுபவங்கள் தொடர்ந்து ஏற் பட்டது. இந்த நேரத்தில்தான் தற்போதைய முதலமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சி தலை வருமான மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளாகிய எங்களுக்கு ஒரு கட்டளையிட்டார்.

வீடுகளில் முடங்கிக்கிடக்கும் பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும்.

நோய்த்தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டும் என்றார். ஈரோடு தெற்கு மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தி.மு.க. நிர்வாகி கள் இணைந்து ரூ.5 கோடி வரை திரட்டி, அனைத்து மக்களுக்கும் கபசுர குடிநீர், முகக்கவசம் மற்றும் தேவையான அனைத்து உதவி களையும் வழங்கினோம். 

தேர்தலுக்கு பின்னர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.

அப்போதும் கரோனா 2ஆவது அலை கடுமையாக மக்களை பாதித்தது. அந்த நேரத்தில் மருத் துவமனைகளின் முக்கியத்துவம் உணர்ந்து பெருந்துறை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 40 நாட்களில் 1,200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை உருவாக்கி னோம்.

அதற்கு ஈரோடு மருத்துவ மனைகள், தொழில் அதிபர்கள் மிகவும் உதவியாக இருந்தார்கள். இந்தியாவிலேயே மருத்துவப் படிப்புக்காக அதிக இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் தமிழ் நாட்டு மாணவ, -மாணவிகளுக்கு கிடைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.

No comments:

Post a Comment