பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம் கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 12, 2023

பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம் கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

கடலூர், செப். 12 - கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் 9.9. 2023 அன்று மாலை 6:00 மணி முதல் 8 மணி வரை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட கழக அமைப்பாளர் மணிவேல் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் தண்ட பாணி கூட்டத்தின் நோக்க உரை ஆற்றினார் . சென்னை மண்டல கழக மேனாள் செயலாளர் வி.ஞானசேகரன் முன் னிலை வகித்தார். பகுத் தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட இணைச்செயலாளர் பஞ்சமூர்த்தி, ஒன்றிய தலை வர் கனகராஜ், செயலா ளர் செந்தில் வேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல், நெய் வேலி கழகப் பொருளா ளர் மாணிக்கவேல், வட லூர் கழக செயலாளர் குணசேகரன், அப்பியம் பேட்டை தனசேகரன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

தீர்மானங்கள்:

தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 17.9.2023 அன்று மாவட்டம் முழு வதும் மூன்று குழுக்களாக தோழர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கிளைக் கழகங்கள் தோறும் முக் கிய இடங்களில் கழகக் கொடிகள் ஏற்றுவது, பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள் வழங்கு வது, பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இனிப்பு வழங்குவது,       மாலை கடலூரில் பெரியார் பட ஊர்வலம் மற்றும் பிரச் சாரக் கூட்டம் நடத்து வது போன்ற தீர்மானங் கள் நிறைவேற்றப்பட் டது. கிளைகழகங்கள் தோறும் பெரியார் பிறந்த நாள் விழா பிரச்சாரக் கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது எனவும் முடி வாற்றப்பட்டது.


No comments:

Post a Comment