"இந்தியா" கூட்டணியின் அடுத்த கட்டம் : தொகுதிப் பங்கீடு பணி போபாலில் அக்டோபர் முதல் வாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் திட்டமிட்ட வகையில் எதிர்க்கட்சிகள் பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 14, 2023

"இந்தியா" கூட்டணியின் அடுத்த கட்டம் : தொகுதிப் பங்கீடு பணி போபாலில் அக்டோபர் முதல் வாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் திட்டமிட்ட வகையில் எதிர்க்கட்சிகள் பயணம்

புதுடில்லி, செப். 14- டில்லியில் சரத் பவார் இல்லத்தில் நடந்த "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் போபாலில் முதலாவது பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜன தாவை வீழ்த்தும் நோக்கத்துடன் காங் கிரஸ், தி.மு.க. உள்பட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. 'இந்தியா' என்று பெயரிடப்பட்ட இக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங் கள், பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்துள்ளன. பல்வேறு பிரச்சினைகளை ஆராய 14 உறுப்பினர்களை கொண்ட ஒருங் கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

"இந்தியா" கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் நேற்று (13.9.2023) நடந்தது. டில்லியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் இக்கூட்டம் நடந் தது. 14 உறுப்பினர்களில் 12 பேர் மட்டும் கலந்து கொண்டனர்.

 சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), ஜாவீத் அலிகான் (சமாஜ்வாடி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்டிரீய ஜனதா தளம்), உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி), ராகவ் சதா (ஆம் ஆத்மி), சஞ்சய் ஜா (அய்க்கிய ஜனதாதளம்), சஞ்சய் ராவத் (உத்தவ் சிவசேனா) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைப்புக் குழு உறுப்பின ரான அபிஷேக் (திரிணாமுல் காங் கிரஸ்) பங்கேற்கவில்லை. நேற்று (13.9.2023) விசாரணைக்கு ஆஜராக அபிஷேக்குக்கு அமலாக்கத்துறை சம் மன் அனுப்பி இருந்தது.

அவர் விசாரணைக்கு சென்றதால் இக்கூட்டத்துக்கு வரவில்லை. ஒருங் கிணைப்புக் குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியின் பிரதிநிதி இன்னும் நியமிக்கப்படவில்லை. அதனால் அக் கட்சியும் பங்கேற்கவில்லை.

ஸநாதன தர்ம சர்ச்சை தொடர்பாக "இந்தியா" கூட்டணி மீது பா.ஜனதா தாக்குதல் தொடுத்து வரும் நிலையில், ஒருங் கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. 

கூட்டத்தில், மாநில வாரியாக கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட் பாளரை நிறுத்த ஆலோசனை நடத்தப் பட்டது.

மராட்டியம், தமிழ்நாடு, பீகார் ஆகிய மாநிலங்களில் பொது வேட் பாளர் தேர்வில் பிரச்சினை இருக்காது என்று "இந்தியா" கூட்டணி கருதுகிறது. ஆனால், டில்லி, பஞ்சாப், மேற்கு வங் காளம், கேரளா போன்ற மாநிலங்களில் பொது வேட்பாளர் தேர்வில் சிக்கல் எழும் என்று நினைக்கிறது.

இதுதவிர, கூட்டணியின் பிரச்சார உத்தி பற்றி ஆலோசனை நடத்தப் பட்டது. எந் தெந்த நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் பேசப்பட்டது.

தொகுதி பங்கீடு

ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முடி வடைந்த பிறகு, காங்கிரசை சேர்ந்த கே.சி.வேணுகோபால், ஒரு கூட்டு அறிக் கையை செய்தியாளர்கள் முன்னி லையில் வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தொகுதிகளை தீர்மானிக்கும் பணியை தொடங்குவது என்று ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட்டாக பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம்

முதலில், மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். அதில், விலைவாசி உயர்வு, வேலையின்மை, பா.ஜனதா அரசின் ஊழல் ஆகிய பிரச்சினைகள் எழுப்பப்படும். ஜாதிவாரி கணக் கெடுப்பு கோரிக்கையை எழுப்ப கூட் டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார். போபால், பாட்னா, நாக்பூர், கவுகாத்தி, டில்லி உள்ளிட்ட 6 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்ட தாக மற்றொரு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தெரிவித்தார். 

ஒருங்கிணைப்புக் குழுவின் 2-ஆவது கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் முடிந்த பிறகு டில்லியில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment