காங்கிரஸ் கிடுக்கிப்பிடி கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 22, 2023

காங்கிரஸ் கிடுக்கிப்பிடி கேள்வி

 மகளிர்க்கு இட ஒதுக்கீடு என்று ஒரு பக்கம் பேசிக்கொண்டுபுதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது ஏன்? 

புதுடில்லி, செப்.22 நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் தொடக்க விழா வுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன் என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப் பினர் ரஞ்சித் ரஞ்சன் கேள்வி எழுப் பினார். மக்களவை, சட்டப்பேரவை களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 128-ஆவது திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

அதைத்தொடர்ந்து மாநிலங்கள வையில்  நேற்று (21.9.2023) நடைபெற்ற இம்மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் பேசியதாவது: 

மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் இம்மசோதாவை எங்கள் கட்சி ஆதரிக்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தின் வழக்கமான கூட்டத்தொடரை விட்டு விட்டு சிறப்புக் கூட்டத்தொடரில் இம்மசோதாவை அறிமுகப்படுத்து வதற்கான அவசியம் என்ன? 

வருகின்ற மக்களவைத் தேர்தலில் பெண்களின் வாக்குகளைப்பெற பாஜக அரசின் உத்தியாக இதை கருதலாம். பெண் களை முன்னிலைப்படுத்துவதாக கூறும் அரசு நாடாளுமன்ற புதிய கட்டடத் தொடக்க விழாவில், பழங்குடியினத்தைச் சார்ந்த முதல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காதது ஏன்? யாரிடமும் கலந்துரையாடாமல் ஒரு புதிய சட்டத்தை இயற்றுவது பாஜக அரசுக்கு புதிதல்ல. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திடீரென அறிவித்தது, 3 வேளாண் சட்டங்களை அறிவித்தது, மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் தொல்லை அளித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது, மணிப்பூர் கலவரம் என எந்த விவகாரம் குறித்தும் ஒன்றிய அரசு விவாதிக்க வில்லை. 

மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை வருகின்ற மக்களைவத் தேர்தலில் இருந்தே அமல்படுத்தலாமே, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை என தள்ளிப்போட காரணம் என்ன? காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி 2009-இல் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்தது. 

ஆனால் பாஜக அரசு ஆட்சிக்கு வந்து  9 ஆண்டுகள் கழித்தே இம்மசோதாவை அறிமுகப்படுத்தி யுள்ளது. பழங்குடியின, பட்டியலினப் பெண்களுக்கு வழங்குவதைப்போல் இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக் கும் இம்மசோதாவில் உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார் அவர்.


No comments:

Post a Comment