உடலுறுப்பு கொடையாளிகளுக்கு அரசு மரியாதை! முதலமைச்சரின் முன்னுதாரண முயற்சி இரா.முத்தரசன் வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 26, 2023

உடலுறுப்பு கொடையாளிகளுக்கு அரசு மரியாதை! முதலமைச்சரின் முன்னுதாரண முயற்சி இரா.முத்தரசன் வரவேற்பு

சென்னை,செப்.26 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- 

தம் உடல் உறுப்பு களை ஈந்து பல மனித உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற் றிடும் வகை யில் இறக்கும் முன் உறுப்பு கொடை வழங்குவோரின் இறுதி நிகழ்வுகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது நாட்டின் முன்னுதாரண முயற்சி என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு  வர வேற்கிறது.

உடல் உறுப்பு கொடையின் மூலம் பல நூறு பேருக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள் ளது.

மூளைச்சாவு அடைந்த துயரச் சூழலிலும் அவர்க ளின் உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க முன் வரும் குடும்பங்களின் தன்னல மற்ற தியாகங்களால் தான் மேற்கண்ட சாத னைகள் சாத்தியமா கிறது.

உடல் உறுப்புதானக் கொடை என்பதின் அவ சியம் மேன்மேலும் உண ரப்பட மக்கள் நல்வாழ்வுத் துறை, மருத்துவத் துறை தமிழ்நாடு அரசின் கீழ் எடுக்கும் முயற்சிகள் மேன்மேலும் தொட ரட்டும்.

இவ்வாறு இரா.முத்தரசன் குறிப்பிட் டுள்ளார்.

No comments:

Post a Comment