தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூர், எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (48). இவரது கணவர் மதி யழகன் மற்றும் முதல் மகன் அரவிந்த ஆகிய இருவர், உடல் நிலை சரியில்லாமல், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர்.
இதையடுத்து, இரண்டாவது மகன் கயிலாஷ்ராஜூடன், லட் சுமி வசித்து வந்தார். லட்சுமிக்கு, 5 ஆண்டுகளாக தலைவலி இருந் துள்ளது. இந்நிலையில், 3 மாதங் களாக தலைவலிஅதிகமானதால், தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அங்கு சோதனை செய்ததில், மூளையில் ரத்த கசிவு இருந்தது தெரியவந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி, சில நாட்களுக்கு முன், அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், அறுவை சிகிச்சை பல னின்றி, லட்சுமி மூளை சாவு அடைந்தார். இதையடுத்து, தாயின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல், நுரை யீரல் ஆகியவற்றை அவரது மகன் கொடையாக வழங்கினர்.
No comments:
Post a Comment