அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலச் சங்கத்தின் ஆண்டு விழா 'மண்டல் குழு பரிந்துரையின் இன்றைய நிலை' கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 26, 2023

அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலச் சங்கத்தின் ஆண்டு விழா 'மண்டல் குழு பரிந்துரையின் இன்றைய நிலை' கருத்தரங்கம்

சென்னை, செப்.26 அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பணி யாளர் நலச் சங்கத்தின்(AIIoBobcSwa)  16ஆம் ஆண்டு விழாவும், 'மண்டல் குழு பரிந்துரைகளின் இன்றைய நிலை' எனும் தலைப்பிலான கருத்தரங்கமும் சென்னை - ராயப்பேட்டை சுவாகத் விடுதியில் 23.9.2023 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

சங்கத்தின் ஆண்டு விழாவிற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியினை சங்கத்தின் செயல் தலைவர் படித்தார்.

இந்த விழாவில், சங்கத்தின் புரவலரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்புத் தலைவருமான டி.கே.எஸ். இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார். அனைத் திந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு அரசின் சமூகநீதி கண்காணிப்புக் குழு உறுப்பின ருமான கோ. கருணாநிதி, சமூகநீதி கண்காணிப்புக் குழுவின் மற்றொரு உறுப்பினரான ஏ. ஜெய்சன் திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

விழாவிற்கு வருகை தந்தோரை வரவேற்று சங்கத்தின் செயல் தலைவர் ரவீணா விஜயகுமார் பேசினார். நிறைவாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ. ராஜசேகரன் நன்றி கூறினார். 

காலையில் நடைபெற்ற நிகழ்வில் சங்கத்தின் தலைவராக டி. பெலிக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சங்கத்தின் துணைத் தலைவர்களாக அபிலேஷ், நாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் அய்.ஓ.பி. வங்கியில் பணியாற்றிய மூத்த தோழர்கள் ராமு (வயது 91), பெத்தாட்சி (வயது 89) ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எஸ்.சி.,/எஸ்.டி., பணியாளர் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சசிகுமார் வாழ்த்துரை வழங்கினார்.

சென்னையில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் இதர பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலச் சங்கங்களின் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment