நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 11, 2023

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நெய்வேலி, செப். 11- நெய்வேலி தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் - அங்கயற்கண்ணி இணையரின் மகன் இரா.சுமந்துக்கும் சாரங்கபாணி செல்வராணி இணை யரின் மகள் சா.தனரஞ்சனிக்கும் நெய்வேலியில் நேற்று (10.9.2023) திருமணம் நடைபெற்றது.

இதில், தி.மு.க. இளைஞரணிச் செய லாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

காணொலி காட்சி வழியாக, முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் கலந்துகொண்டு திருமண விழாவில் பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:- 

ஜி-20 மாநாட்டையொட்டி குடியர சுத் தலைவரின் அழைப்பின் பேரில் டில்லி சென்றுவிட்டேன். இந்த செய் தியை சபா.ராஜேந்திரனுக்கு நான் தொலைப்பேசி வாயிலாக தெரிவித் தேன். அவரும் என்னுடைய நிலை மையை புரிந்து கொண்டு, "நீங்க போய்விட்டு வாங்கண்ணா" என்று பாசத்தோடு சொன்னார். சபா. ராஜேந் திரனின் குடும்பமும் என் குடும்பம்தான்.

அதனால்தான், எனக்குப் பதிலாக, நம்முடைய இளைஞரணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி கலந்து கொள்வார் என்று அவரிடம் சொன்னேன். டில்லி யில் இருந்தாலும், என்னுடைய எண் ணங்கள் எல்லாம் நெய்வேலியில்தான் இருக்கிறது. சபா.ராஜேந்திரன் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார். 

தனது தொகுதிக்குத் தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவதில், சபா.ராஜேந்திரன் எப்போதுமே கண் ணும் கருத்துமாக இருப்பார். இது என்னைவிட நெய்வேலி தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். 

இதை எல்லாம் பார்க்கும்போது, சபா.ராஜேந்திரனை,- சபாஷ் ராஜேந் திரன் என்று சொல்லத் தோன்றுகிறது. பொதுவாக, மண விழாக்களில் கலந்து கொள்ளும்போது, என்னுடைய பேச் சின் இறுதியில், நான் 2 கோரிக்கைகள் வைப்பேன். மணமக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்கிற முதல் கோரிக்கை.

ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவிலே நான் அந்தக் கோரிக்கையை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். கண்டிப்பாக தமிழில் தான் பெயர் வைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

அதேபோல, இன்னொரு கோரிக்கை என்னவென்றால், மணமக்கள் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டர்களாக விளங்க வேண்டும் என்று சொல்வேன். நம்முடைய வீடு மட்டும் அல்ல, நாடும் நன்றாக இருக்க வேண்டும். 

அதற்காகவும் பங்களிக்க வேண்டும் என்று சொல்வேன். நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் "இந்தியா" கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப் பாற்ற முடியும். ஆகவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் இருக்கிற 40 தொகுதிக ளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும்.

அப்படி முழு வெற்றியை பெற்றால் தான் அடுத்து அமையப்போகிற ஒன்றிய ஆட்சியிலும் நாம் முக்கிய பங்காற்ற முடியும். நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க இந்த திருமண விழாவில் உறுதி எடுத்துக்கொண்டு, "நாற்பதும் நமதே நாடும் நமதே" என்ற முழக்கத்துடன் விடை பெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment