மின்னஞ்சலில் பிணை உத்தரவிட்டும் 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 29, 2023

மின்னஞ்சலில் பிணை உத்தரவிட்டும் 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி

குஜராத் சிறைத்துறைக்கு 

ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிப்பு

காந்திநகர்,செப்.29- குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்ஜி தாக்கூர். 27 வயது இளைஞரான இவர் 2020 கொலைக் குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த ஆண்டுதான் கரோனா தொற்று பரவியதால் வழக்கு கள் அனைத்தும் ஆன்லைனின் நடைபெற்று வந்தது.

இதனால் அவரது பிணை மனு மீதான விசாரணையும் இணைய வழியில் நடைபெற்றுள்ளது. பின்னர் இவருக்கு உயர்நீதிமன்றம் பிணை வழங்க உத்தரவிட்டு, அந்த உத்தரவுகளைச் சிறை நிர்வாகத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளது. 

ஆனால் இந்த மின்னஞ்சலைச் சிறை அதிகாரிகள் திறந்து பார்க்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்தன்ஜி தாக்கூர் பிணை கிடைத்தும் மூன்றாண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இவர் மீண்டும் பிணை  கேட்டு முறையிட்டபோதுதான், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

பின்னர் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.சுபேஹியா மற்றும் எம்.ஆர்.மெங்டே ஆகியோர் அடங்கிய அமர்வு, பிணை கிடைத்தும் 3 வருடங்கள் சிறையிலிருந்த குற்றவாளிக்கு ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தர விட்டனர். மேலும் இந்த இழப்பீட்டை 15 நாள்களுக்குள் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment