வழக்குரைஞர்கள் நடத்தும் சுயமரியாதைத் திருமணம் செல்லும் உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 29, 2023

வழக்குரைஞர்கள் நடத்தும் சுயமரியாதைத் திருமணம் செல்லும் உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

புதுடில்லி, ஆக. 29 - .ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த இளவரசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளேன். கடந்த 2018-இல் என் மனைவி 'மைனராக' இருந்தபோது அவரது பெற்றோர் குழந்தை திருமணத்துக்கு கட்டாயப்படுத்தி யுள்ளனர்.

இதுகுறித்து அவர் மாவட்ட குழந்தைகள்நல அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதனால் குழந்தை திருமண நடவடிக்கையை கைவிட்டு, படிக்க வைப்பதாக அதிகாரிகளிடம் அவரது பெற் றோர் கூறியுள்ளனர். ஆனால் அதை மீறி உறவினருக்கு கட்டாய திருமணம் செய்துவைத்துள்ளனர்.

இதனால் வீட்டைவிட்டு வெளியேறி, கடந்த மாதம் என்னை திருப்பூரில் சுயமரியாதை திரு மணம் செய்துகொண்டார். வீட்டில் இருந்த என் மனைவியை அவரது பெற்றோரும், உறவினர் களும் கடந்த 3ஆம் தேதி கடத்திச் சென்றனர். எனவே என் மனை வியை கண்டுபிடித்து ஆஜர்படுத்து மாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் தண்ட பாணி, விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர். அப் போது அரசு தரப்பில், ஏற்கெனவே ஒருமுறை இதேபோல் புகார் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண், தன்னை யாரும் கடத்த வில்லை, தான் விரும்பியே சென்ற தாக கூறினார்.

குழந்தை திருமணமாக இருந் தாலும், அதை சட்டப்படிதான் ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாமல் மறுதிருமணம் செய்ய முடியாது. சுயமரியாதை திருமண மாக இருந்தால் வழக்குரைஞர் முன்னிலையில் திருமணம் நடந்த தாக திருமணச் சான்று வழங்க முடியாது என ஏற்கெனவே ஒரு வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது என கூறப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவில், வழக்குரைஞர்கள் முன் நடந்த திருமணம் செல்லாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரருக்கு சுயமரியாதை திருமணம் தனது முன்னிலையில் நடந்ததாக சான்று அளித்த வழக்குரைஞர் உள்ளிட் டோருக்கு தமிழ்நாடு பார் கவுன் சில் தரப்பில் தாக்கீது அளித்து விளக்கம் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேறு எங்கும் இதேபோல் திருமணம் நடந்ததாக யாராவது சான்றிதழ் வழங்கினால் அவர்க ளுக்கும் தாக்கீது வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்த உத்தரவுக்கு எதிராக இளவரசன் சார்பில் வழக்குரைஞர் ஏ.வேலன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக் கால தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மேல்முறை யீட்டு மனுவை நீதிபதிகள் எஸ்.ரவீந் திரபட், அரவிந்த்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரரின் வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட இந்து திருமண சட்டத்தின்படி வழக்குரைஞர்கள் சுயமரியாதை திருமணங்களை நடத்திவைக்கலாம். 

தமிழ்நாட்டின் திருத்தப்பட்ட இந்து திருமண சட்டத்தை நாக லிங்கம் எதிர் சிவகாமி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு உறுதி செய்துள்ளது. தொழில் முறையில் அல்லாது தனிப்பட்ட முறையில் இது போன்ற திருமணங்களை வழக் குரைஞர்கள் நடத்திவைக்கலாம் என்று கூறி, உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ரத்து செய்தது.

No comments:

Post a Comment