சமூக விரோதிகள்தான் பா.ஜ.க.வில் சேருகிறார்கள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேட்டி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 6, 2023

சமூக விரோதிகள்தான் பா.ஜ.க.வில் சேருகிறார்கள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேட்டி!

சென்னை, ஆக, 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் க.கனக ராஜ் பேட்டி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவரது பேட்டி வருமாறு: -

தமிழ்நாட்டில் யோக்கியமான ஆட்சி கொண்டு வரப் போகிறேன் என்றும், தான் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து, இரண்டாவது கையெழுத்து என்று சொல்வதற்கு முன்பு அவர்களது கட்சி சேர்த்தி ருக்கின்ற ஆட்களைப் பாருங்கள்.

இன்றைக்கு செய்தி வந்திருக்கிறது

ஆரூத்ரா பைனான்ஸ். அதா வது மல்டிநேஷனல் கம்பெனிகளில் இருக்கக் கூடிய எக்ஸ்ட்டிவ்ஸ், பேங்கில் இருக்கக் கூடியவர்கள். இந்த ஆரூத்ரா பைனான்சில் இருப் பவர்கள் என்று மூன்று பேரும் சேர்ந்து, இதே போல அய்.எப்.எஸ். என்றும் ஒன்று. இந்த ஆரூத்ராவில் மட்டும் 2400 கோடி ரூபாய் கொள்ளையடித்து கொண்டு போய் விட்டார்கள்.

மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்க்கின்ற ஆட்களிடம் சென்று, ஒரு இலட்சம் போட்டால் மாதம் 25,000 ரூபாய் ரிட்டன் கிடைக்கும் என்று சொல்லி, கையில் முதலீடு செய்ய காசு இல்லை என்றால், ஊதியத்தில் பிடித்துக் கொள்ளலாம், அதற்கு லோன் பேங்கில் கொடுப்பார்கள் என்று சொல்லி, அந்த பேங்க், மேனேஜ்மெண்ட், இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து 2400 கோடி ரூபாயை திருடிவிட்டு ஒரு வர் ஓடிப் போய்விட்டார்.

அந்த 2400 கோடி ரூபாயை திருடினவன், உடனே பா.ஜ.க.வில் சேருகிறான். பா.ஜ.க.வில் சேர்ந்த தும் அவன் விளையாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர், ஒரு கட்சியில் சேர்ந்த உடனே அவ்வளவு பெரிய பொறுப்பு கொடுப்பீர்களா?

பெரிய யோக்கியர் மாதிரி பேசு கிறாரே அண்ணாமலை, இப் போது கேட்டால், அப்போதே நீக்கி விட்டோம் என்கிறார். ஆனால் இப்போது செய் திகள் என்ன சொல்கிறது? ஏரா ளமான பணம் கொடுத்துள்ளார். ஏதோ ஒரு நபர் இப்படி சேர்ந்து விட்டார் என்றால் அவர்களை இப்படிச் சொல்லலாமா? ஆனால், இரண்டு ஆண்டு காலத்தில் நான் ஒரு பட்டியல் சொல்கிறேன்,

8 கொலை வழக்கு, 11 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 48 வழக்குகள் வைத்திருக்கக் கூடிய படப்பை குணா. அவர் பா.ஜ.க.வில் சேர்ந்து தேசிய சேவை செய்யப் போறாரா இப்போது? 

அண்ணாமலை இதற்கு பதில் சொல்ல வேண்டும்!

6 கொலைகள், 6 முறை குண்டர் சட்டம் இதில் கைது செய்யப்பட்ட வட சென்னை கல்வெட்டு ரவி, அவர் பா.ஜ.க. கட்சிகாரர்தானே மிஸ்டர் அண்ணாமலை! அவ ருக்கு என்ன சட்டம்-ஒழுங்கை டீல் செய்வதற்கான பதவியை நீங்கள் கொடுக்கப் போறீங்களா? அது தெரியவில்லை.!

அடுத்து 5 முறை குண்டர் சட் டத்தில் கைது செய்யப்பட்டு, சிறைக்குப் போய் விட்டு வந்திருக் கின்ற சேலம் ரவுடி முரளி- கொலைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர் புடைய கஞ்சா வியாபாரி அஞ்சலை தான் உங்கள் கட்சிக்கு மக ளிர் அணிச் செயலாளர். சீர்காழி ஆனந்த் என்று இப்படி பலபேரை சொல்ல முடியும். 

கஞ்சா விற்கின்றவன், ரவுடித் தனம் செய்கின்றவன், சமூக விரோ தச் செயல்களில் ஈடுபடுகின்றவன், நீங்கள் வங்கி, பன்னாட்டு நிறுவ னங்களோடு கூட்டுச் சேர்ந்து, ஒரு லட்சம் பேர்களிடம் இருந்து 2400 கோடி ரூபாய் கொள்ளையடித் தவர்களை எல்லாம் அவசரம் அவ சரமாக பா.ஜ.க. கட்சியில் சேர்க் கின்றீர்கள், இவர்களை போலீஸ் அண்டக்கூடாது என்று பார்த்துக் கொள்கிறார்கள். ஆரூத்ரா கேஸில் கைது ஆகி இருக்கக் கூடிய ஹரீஸ் பற்றி என்ன மக்கள் சொல் கிறார்கள் என்றால், இதே குற்றச் சாட்டுகளில் கைதான சில பேர் களை, வெளிநாட்டுக்குத் தப்பிப் செல்வதற்கு பா.ஜ.க. நிர்வாகி என்கிற பொறுப்பால் இப்படி செய்கிறார்கள். யோக்கியமானவர் கள் எல்லாம் பி.ஜே.பி.யில் இல்லை. எனவே நீரவ் மோடியையும், லலித் மோடியையும் பா.ஜ.க.தான் ஆத ரித்தது, அவர்களை வெளிநாட் டிற்கு தப்பவிட்டதும் பா.ஜ.க. என்பதுதானே உண்மை! இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் க. கனக ராஜ் பேட்டியளித்தது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment