காவிரிப் பிரச்சினை: வரலாறு தெரியாமல் பேசுவதா? ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 7, 2023

காவிரிப் பிரச்சினை: வரலாறு தெரியாமல் பேசுவதா? ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி

சென்னை, ஆக. 7-  "காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில்தான் நடுவர் மன்றத்தில், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்சினை என்றால் உச்ச நீதிமன்றத்தைத் தான் நாடே வேண்டுமே தவிர, மீண்டும் கருநாடக மாநிலத்தோடு பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காவிரி பிரச் சினையின் அடிப்படை வரலாறே தெரியாமல் பேசுவது" என்று ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு, அமைச்சர் துரை முருகன் பதில் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"கடந்த இரண்டு மாத காலமாக கருநாடகம் தமிழ்நாட்டுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்த அளவுப்படி தண்ணீரை வழங்கவில்லை. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கும், ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை நான் இரண்டு முறை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கி இருக்கிறேன்.

காவிரியிலிருந்து தண்ணீரை திறந்துவிடு என்று கூறுகிற அதி காரம் காவிரி மேலாண்மை வாரி யத்துக்குத்தான் உண்டு. அந்த வாரியம் கூட்டிய கூட்டங்களில் தமிழ்நாடு நீர்வளத்துறை செயலா ளர் சந்தீப் சக்சேனா, கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு தண் ணீர் திறந்துவிட கருநாடகத்தை அறிவுறுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். ஆனாலும், இதுவரையில் காவிரி மேலாண்மை வாரியம் முழுமையாக செயல்படவில்லை. 

நீர் சராசரியாக கிடைக்கும் வரு டங்களில் கருநாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரை பகிர்ந்து கொள்வதை  Pro- Rata Basis  என்று குறிப்பிடுவார்கள். அந்த பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை செய்யவில்லை.

இந்த வாரியம் ஒன்றிய அரசின் கீழ் இயங்குகிறது. எனவே தான் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்து விட கருநாடகத்தை அறிவு றுத்துமாறு வாரியத்திடம் கேட் டுக் கொண்டிருக்கின்றோம். அந்த பணியை வாரியம் செய்ய வேண்டும் என்றுதான் தமிழ்நாடு முதலமைச் சரும் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்துக்கு பிரதமர் அலுவலகமோ அல்லது ஒன்றிய நீர்வளத்துறை அமைச் சரோ பதில் அளிக்காத நிலையில், ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "கருநாடகத்தில் காங் கிரஸ் ஆட்சி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி, இரண்டும் ஓர் அணியில் இருக்கிறார்கள் ஏன் பிரச்சினையை நேரில் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது" என்று தெரிவித்திருக் கிறார்.

ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு காவிரி பிரச்சினையின் முழு விவரம் தெரியவில்லை என்று நினைக் கிறேன். 1967ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை இப்பிரச் சினை குறித்து பேசிப் பேசி எந்த முடிவுக்கும் வரமுடியாத நிலையில் தான், ஒன்றிய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்துக்கு போய், உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களோடு தீர்ப்பு வழங்கி விட்ட பிறகு இரு மாநிலங்களி டையே பேச்சு வார்த்தை என் பதற்கே இடமில்லை.

பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந் திருந்தால் நடுவர் மன்றம் அமைத் திருக்க வேண்டிய அவசியமே ஏற் பட்டிருக்காது. இவையெல்லாம் நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வரலாறு.

'தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு' என்று கிராமங்களில் கூறுவது போல, தோழமையாக இருந்தாலும் தோழமையாக இல்லாவிட்டாலும் அவரவர் உரிமையை நிலைநாட்டு வதில் அவரவர்கள் உறுதியாக இருப்பார்கள். அந்த நிலைப்பாடு தான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு. இந்த விவரமெல்லாம் தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் முதலமைச்சருக்கு அறிவுரை சொல்வது போல் ஓர் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இதில் இன்னொரு வேடிக்கை _ வேடிக்கையானது மட்டுமல்ல, வேதனையானது என்னவென் றால், தமிழ்நாட்டின் நீர்வளத் துறை அமைச்சராகவும், மேனாள் முதலமைச்சராகவும் இருந்தவரு மான ஓ.பன்னீர்செல்வம், ஒரு அறிக்கையில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கருநாடக மாநில முதலமைச்சரோடும், நீர் வளத்துறை அமைச்சரோடும் பேசி தண்ணீரை பெற வேண்டும் என்று தெரிவித்திருப்பதுதான். 

கருநாடக மாநிலத்தோடு பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காவிரி பிரச் சினையின் அடிப்படை வரலாறே தெரியாத்தனம்தான். பாவம், அர சியல் பிரச்சினையில் ஓ.பன்னீர் செல்வம் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறார் என்பதைத்தான் அவர் அறிக்கை காட்டுகிறது, என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment