செங்கல்பட்டு, செய்யாறு நகர வளர்ச்சிக்கான தொழிலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

செங்கல்பட்டு, செய்யாறு நகர வளர்ச்சிக்கான தொழிலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை, ஆக.1- செங்கல்பட் டில் ரூ.210 கோடியில் தனியார் நிறுவன மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்யாறு சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.290 கோடியில் விபத்து பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 4,10,561  பேருக்கு வேலைவாய்ப்பு அளிக் கும் வகையில், ரூ.2,73,448 கோடி மதிப்பிலான 224 முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

மேலும் சில திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக் கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், மஹிந்திரா குழு மத்தின் அங்கமான மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம், 2012இ-ல் செங்கல்பட்டு மாவட் டத்தில் 125 ஏக்கரில் மஹிந்திரா ஆராய்ச்சி மய்யத்தை நிறுவியது. இது பன்னாட்டு அளவிலான, மோட்டார் வாகனம் மற்றும் உழவு இயந்திர தயாரிப்புகளின் முதலாவது ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மய்யமாகும்.

இந்த மய்யம் சமீப காலங் களில் எக்ஸ்யுவி 500, தார், எக்யுவி 300, கேயுவி 100, ஆல்டு ராஸ், டியுவி 300 மற்றும் அர்ஜுன் நோவோ, யுவோ மற்றும் ஜிவோ போன்ற பல்வேறு புதிய வகை வாகனங்கள் மற்றும் உழவு இயந் திரங்களை உருவாக்கியுள்ளது. மேலும், செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் 454 ஏக்கரில் இந்நிறுவனம் அமைத்துள்ள சோதனைத் தடத்தில், வாகன சவாரி, கையாளுதல் மற்றும் பிற திறன் சரிபார்ப்புகளை மேற் கொண்டு வருகிறது.

850 பேருக்கு வேலைவாய்ப்பு

இந்நிறுவனம், 2022 ஜூலை மாதம் தமிழ்நாடு அரசின் வழி காட்டி நிறுவனத்துடன் புரிந் துணர்வு ஒப்பந்தம் மேற்கொண் டது. இதன்படி, 2022 ஏப்ரல் முதல் 4 ஆண்டுகளுக்குள் கூடுத லாக ரூ.500 கோடி முதலீடு மேற் கொள்வதாகவும், குறைந்த பட் சம் 850 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ. 210 கோடியில் மஹிந்திரா ஆராய்ச்சி மய்யம், செய்யாறு சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.290 கோடியில் மஹிந்திரா எஸ்யுவி வாகனங் களுக்கான பரிசோதனைத் தளம் (விஷிறிஜி) மற்றும் கோவை யில் ரூ.12 கோடியில் தகவல் தொழில்நுட்ப மய்யம் ஆகிய வற்றை அமைக்க முன்வந்துள் ளது.

அதன்படி, செங்கல்பட்டில் ரூ.210 கோடியில் அமைக்கப்பட் டுள்ள மஹிந்திரா மின்கலன் பரிசோதனை மய்யத்தை, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று (31.7.2023) திறந்து வைத்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொண்ட ஓராண்டிலேயே இதன் தொடக்க விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும், மஹிந் திரா நிறுவனம் சார்பில், செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.290 கோடியில், மின் வாகன விபத்து பரிசோதனை ஆய்வகம் மற்றும் மின்கலன் கட்டுருவாக்க மய்யம் நிறுவும் திட்டத்துக்கு முதல மைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங் கள் உற்பத்தி மற்றும் ஏற்று மதியில், தேசிய அளவில் தமிழ் நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 

இத்தகு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், இந்த துறையில் தமிழ்நாட்டை மேலும் வலுப்படுத்தும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தொழில் துறைச் செயலர் ச.கிருஷ்ணன், வழி காட்டி நிறுவன மேலாண் இயக்கு நர் வே.விஷ்ணு, மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன உயர் அலுவலர்கள் ஆர்.வேலு சாமி, அபாந்தி சங்கரநாரா யணன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

No comments:

Post a Comment