மாணவர் கையில் ஆயுதங்களாம்! வேதனைப்படுகிறாராம் தமிழிசை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

மாணவர் கையில் ஆயுதங்களாம்! வேதனைப்படுகிறாராம் தமிழிசை


திராவிட இயக்கமும் கொடுக்கவில்லை, ஆயுதங்களை எந்த ஒரு பகுத்தறிவு இயக்கமும் கொடுக்கவில்லை. கம்யூனிஸ்ட் இயக்கமோ, அல்லது இடதுசாரி மாணவர் இயக்கமோ கொடுத்ததில்லை. ஆனால்,  தெருக்களில் ஊர்வலம் செல்வோம் என்று கூறி கைகளில் லத்தியை கொடுத்தது தமிழிசை சவுந்தரராஜன் போற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான்.

கொல்கத்தா சாலைகளில் ஜெய் சிறீராம்! என்று கூறிச்செல்லும் போது வாளையும் திரிசூலத்தையும் கொடுத்தது, விசுவ ஹிந்து பரிஷத், உத்தராகண்டில் அர அர மகாதேவ் என்று கூறிக்கொண்டு செல்லும் கூட்டத்தின் கைகளில் கத்தி, துப்பாக்கி கொடுத்தது பஜரங் தள், அரியானா, உத்தரப்பிரதேசம், மகாராட்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம், அசாமில் இரும்புக்கம்பி, கத்தி, வாள், திரிசூலம், துப்பாக்கி மற்றும் கதாயுதத்தைக் கொடுத்து இசுலாமியர்களின் வாழ்விடங்களை தாக்கவும், கொலைசெய்யவும், வாகனங்களை அடித்து நொறுக்கவும் பயிற்சி அளித்து ஊர்வலம் செல்லவைத்தது, அனைத்தும் ஹிந்துத்துவ அமைப்புகள். சான்றுகள் ஒன்றா இரண்டா? இதோ.... மாணவர்களின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்தவர்கள் யார் என்று தெரிகிறதா?


No comments:

Post a Comment